தென் மாவட்டங்களில் மட்டும் 32 தொகுதிகள்; மொத்தமாக அள்ளிய திமுக... ஆதிக்கத்தை நிலைநாட்டுமா!
சென்னை: தென்மாவட்டங்களில் எப்போதும் ஆதிக்கம் செலுத்தும் திமுக, இந்த முறையும் அங்கு 32 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கி உள்ளது.
Recommended Video
திருச்செந்தூரில் அனிதா கிருஷ்ணனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் , ராதாபுரத்தில் அப்பாவு போட்டியிடுகிறார்கள்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்ப்பட்டுளளது. சில கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் இன்று காலை திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் எப்போதும் திமுக ஆதிக்கம் செலுத்தும். அங்கு அதிகமாக திமுக வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். இதேபோல் இந்த முறை தென்மாவட்டங்களில் 32 தொகுதிகளில் திமுக களம் இறங்குகிறது.
குறிப்பாக திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ராதாபுரம், அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாகர்கோவில், தூத்துக்குடி, திருச்செந்தூர், கன்னியாகுமரி, பத்மாபுரம், சங்கரன்கோவில் ஆகிய தொகுதிகளில் திமுக களம் காண்பதாக அறிவித்துள்ளது.
தூத்துக்குடியில் கீதாஜீவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆலங்குளத்தில் பூங்கோதை ஆலடி அருணாவுக்கும், திருச்செந்தூரில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பத்மாபுரத்தில் மனோ தங்கராஜ் போட்டியிடுகிறார். நாகர்கோவிலில் சுரேஷ் ராஜனும், கன்னியாகுமரியில் எஸ்.ஆஸ்டினும் போட்டியிடுகின்றனர்.
அம்பாசமுத்திரத்தில் ஆவுடையப்பன் , ராதாபுரத்தில் அப்பாவு போட்டியிடுகிறார்கள். திருநெல்வேலியில் லெட்சுமணனும், பாளையங்கோட்டை தொகுதியில் அப்துல் வகாபும் போட்டியிடுகின்றனர். சங்கரன்கோவில்(தனி) ஈ.ராஜா போட்டியிடுகிறார். வழக்கம்போல் இந்த முறையும் தென்மாவட்டங்களில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட திமுக தயாராக உள்ளது.












Click it and Unblock the Notifications