Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வட சென்னையின் ஐந்து வருட காத்திருப்புக்கு விடிவு.. வடபெரும்பாக்கம் பாலம் திறப்பு.. மக்கள் மகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வட சென்னையில் மழைக்காலங்களில், புழல் உபரி கால்வாயில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஏற்கனவே இருந்த தாழ்வான பாலம் தொடர்ந்து நீரில் மூழ்கியது. இதனால் வாகனப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு வந்த காரணத்தால், அப்பகுதி மக்களுக்குக் கடுமையான சிரமத்தை சந்தித்து வந்தார்கள். இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் வடபெரும்பாக்கத்தில் புதிய பாலம் கட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய பாலம் இன்று திறக்கப்பட உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

சென்னை மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என். நேரு, ரூ.22.41 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய வடபெரும்பாக்கம் பாலத்தை இன்று திறந்து வைக்கிறார். வடபெரும்பாக்கம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து மாதவரத்திற்குச் செல்லும் ஆயிரக்கணக்கான மக்களுக்கு இந்தப் பாலம் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The five-year wait for North Chennai comes to an end The Vadaperumbakkam bridge opens today

மழைக்காலங்களில், புழல் உபரி கால்வாயில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், ஏற்கனவே இருந்த தாழ்வான பாலம் தொடர்ந்து நீரில் மூழ்கி, வாகனப் போக்குவரத்தைத் துண்டிக்கப்பட்டது. இதனால் அப்பகுதி மக்களுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்தி வந்தது. இந்த நீண்டகாலப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் நோக்கில் இந்தப் புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது.

மணலி மற்றும் மாதவரம் பகுதிகளுக்கு சாலை இணைப்பை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த 2020ம் ஆண்டு மே மாததில் சுமார் 22 கோடி ரூபாய் செலவில் வடபெரும்பாக்கம் பாலம் கட்டும் பணி தொடங்கியது. செனன்னை மாநகராட்சி ஆணையர் ஜே. குமரகுருபரன் இதுபற்றி கூறுகையில், "வடபெரும்பாக்கம் பாலம் அனைத்து வேலைகளும் முடிவடைந்துவிட்டன. இந்தப் பாலம் 190 மீட்டர் நீளமும் 7.5 மீட்டர் அகலமும் கொண்டது. மணலி மற்றும் மாதவரம் பகுதிகளைச் சேர்ந்த சுமார் 1 லட்சம் மக்கள் இந்தப் பாலத்தால் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது," என்று கூறினார்.

மழைக்காலங்களில் எந்த பிரச்சனையும் இன்றி மக்கள் கடந்து செல்ல வசதியாக வடபெரும்பாக்கத்தில் உள்ள கால்வாயின் குறுக்கே இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலம் மணலி மற்றும் மாதவரம் மண்டலங்களில் உள்ள முறையே வார்டு 17 மற்றும் வார்டு 23-ஐ இணைக்கிறது. இந்தத் திட்டத்திற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் மூலதன நிதியிலிருந்து நிதி ஒதுக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தொடங்கப்பட்ட வடப்பெரும்பாக்கம் பாலம், கொரோனா லாக்டவுன் காரணமாக வேலைகள் நடைபெறவே இல்லை.. , நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தடைகள் மற்றும் ஒரு முக்கிய கடல்நீரைக் குடிநீராக்கும் குழாய்த்திட்டத்தை இடமாற்றம் செய்வதில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிந்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+