அரசு கலைக் கல்லூரி பேராசிரியர்கள் மறு நியமனம்.. மாணவர்களுக்காக அரசு எடுத்த முக்கிய முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் பணி ஓய்வு பெறுவது தொடர்பாக முக்கிய அறிவிப்பு அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுவாக அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வி ஆண்டில் இடையில் ஓய்வு பெற்றாலும் அவர்களுக்கு பணி ஓய்வு வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில், கல்வி ஆண்டின் இடையில் பணி ஓய்வு பெற்றால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்பதால் கல்வி ஆண்டின் இறுதியில் அதாவது மே 31 ஆம் தேதி வரை ஓய்வு பெறுவோர் பணியாற்ற வேண்டும் என ஆணை வெளியாகியுள்ளது.

arts college students


தமிழ்நாடு அரசின் கல்லூரிக் கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி ஆசிரியர்கள் மறுநியமனம் தொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலைக் கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் ஓர் கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் நிலை எழும் பொழுது மாணவர்களின் கல்விக்கு இடையூறு ஏற்படும் என்ற காரணத்தால், அவ்வாசிரியர்களை வயது முதிர்வு மாதம் ஓய்வு பெற அனுமதித்து மீண்டும் அக்கல்வி ஆண்டின் இறுதி வரை மறுநியமனம் செய்யும் முறை நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது.

இளநிலை மற்றும் முதுநிலை மாணவர்களுக்கான பாட வகுப்புகள் ஏப்ரல் முதல் வாரத்துடன் முடிவடைந்து விடுவதாலும், மே மாதத்தில் தேர்வுகள் / விடைத்தாள் திருத்தும் பணிகள் மட்டுமே நடைபெறுவதாலும், கல்வி ஆண்டின் இடையில் வயது முதிர்வின் காரணமாக ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் 30 ஆம் தேதி வரை மறுநியமனம் வழங்கி ஆணையிடப்பட்டது.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கல்லூரிக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் பயிலும் மாணாக்கர்களின் நலனை கருதில் கொண்டு நிர்வாக பதவிகளான கல்லூரி கல்வி இணை இயக்குநர், மண்டல கல்லூரிக் கல்வி இணை இயக்குநர், கல்லூரி முதல்வர் மற்றும் இதர கல்விசார் பணியாளர்களான கல்லூரி நூலகர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் பதவிகள், நீங்கலாக கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு 2025 மே மாதம் 31 வரை மறுநியமனம் நீட்டித்து உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+