Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாட்டில் 9 ரக நாய்களை இனப்பெருக்கம் செய்ய தடை.. அரசின் நாய் வளர்ப்பு கொள்கை என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் வளர்ப்பு நாய்களை உரிமையாளர் பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக அரசு இணையதளத்தில் தெரிவித்துள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் குளிர் பிரதேசங்களில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 9 ரக நாய்களை இனி இனப்பெருக்கம் செய்ய தடை என்ற விதிமுறையை புதிய தமிழ்நாடு நாய் வளர்ப்பு கொள்கை வரைவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் செல்லப்பிராணிகளாக பூனை, நாய், கிளி, புறா உள்ளிட்ட விலங்குகளை வளர்க்கிறார்கள். இதில் முதல் இடத்தில் நாய் இருக்கிறது. அடுத்த இடத்தில் பூனை இருக்கிறது. பூனைகளால் மனிதர்கள் தாக்கப்படுவது மிக அபூர்வமானது.. ஆனால் நாய்களால் தாக்கப்படுவது தினசரி வாடிக்கையாக உள்ளது.

 The new Tamil Nadu Dog Breeding Policy will ban the breeding of 9 breeds of dogs

நாய்கள் செல்லப்பிராணியாக மட்டுமில்லாமல் காவல் காக்கும் உயிரினமாகவும் உள்ளது. நாய்கள் தங்கள் எஜமான் வீட்டில் உள்ளவர்களிடம் அதிக பாசம் காட்டுபவை. நாய்களை பாதுகாப்பிற்காக மட்டுமின்றி சிலர் அழகுக்காக, சிலர் விளையாட்டுக்காகவும், சிலர் பந்தாவிற்காகவும் நாய்களை வாங்கி வளர்க்கின்றனர். வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்ப்பது என்பது பணக்கார வீடுகளின் கலாச்சாரங்களில் ஒன்றாக இன்றைக்கு மாறி உள்ளது..

ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்பட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான நாய்கள் தமிழ்நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு வளர்க்கப்படுகின்றன.. நாட்டு நாய்களை விடவும் வெளிநாட்டு நாய்களை வளர்ப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள், இவற்றில் பல நாய் இனங்களுக்கு நம் தமிழகத்தில் உள்ள தட்ப வெப்ப நிலை ஏற்றுக்கொள்ளும் வகையில் உள்ளது. இந்த காரணங்களை முன்வைத்து தமிழ்நாடு அரசின் புதிய வரைவு கொள்கை, குளிர் பிரதேசங்களை சேர்ந்த 9 நாய்களை தமிழ்நாட்டில் இனப்பெருக்கம் (Breeding) செய்ய தடை செய்திருக்கிறது.

தமிழ்நாட்டில் வளர்ப்பு நாய்களுக்கான தனிக் கொள்கையை தமிழக அரசு தயாரித்து வரும் நிலையில்,'. இதற்கான வரைவு அறிக்கை, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பாசெட் ஹவுண்ட் (Basset Hound), பிரஞ்சு புல்டாக் (French Bulldog), அலாஸ்கன் மலாமுட் (Alaskan Malamute), கீஷொண்ட் (Keeshond), நியூஃபவுண்ட்லாந்து (Newfoundland), நார்வே எல்கவுண்ட் (Norwegian Elkhound), திபெத்திய மாஸ்டிஃப் (Tibetan Mastiff), சைபீரியன் ஹஸ்கி (Siberian Husky), செயின்ட் பெர்னார்ட் (Saint Bernard) ஆகிய 9 நாய் இனங்கள் இந்திய தட்பவெப்பம் போன்ற சூழலை தாக்குப்பிடிக்கக் கூடியதாக இல்லை. எனவே, அதுபோன்ற குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு கண்டிப்பாக தடை விதிக்கப்படும்.

வளர்க்க உள்ள குறிப்பிட்ட நாய்கள் குறித்த விவரங்களை, தமிழ்நாடு விலங்குகள் நல வாரியத்தில் பதிவு செய்ய வேண்டும். நாய்களின் உடல்நிலை குறித்த சான்றிதழை விலங்குகள் நல வாரியம் வழங்கும். நாய்களுக்கான உரிமையாளர்கள் குறித்த விவரங்கள், விலங்குகள் நல வாரியத்தில் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

நாய் வளர்ப்போர் அனைவரும் அதை வளர்க்கும் முறை, உணவு, இனப்பெருக்கம், செயல்பாடு பற்றி தெரிந்திருக்க வேண்டும். அதன் மனம் மற்றும் உடல் நிலை பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். வளர்ப்பு நாய்களுக்கான உடல் நலனை கால்நடை மருத்துவர் மூலமாக அடிக்கடி சோதித்து பார்க்க வேண்டும்" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டு மக்களை பொறுத்தவரை நாய்கள் அழகாக இருக்கிறது என்பதற்காக வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வாங்கி விடுகிறார்கள் . ஆனால், ஐரோப்பா, கனடா போன்ற மிக குளிர் அதிகமான பகுதிகளில் வளர்ந்த நாய்களுக்கு' 24 மணிநேரமும் குளிரூட்டப்பட்ட அறையில் வைத்திருக்க வேண்டிய நிலை வருகிறது. மைனஸ் டிகிரியில் இருக்கும் குளிர் பிரதேசங்களில் இருந்து வந்த நாய்களை சாதாரண கிளைமேட்டில் வைக்க முடியாத நிலை இருக்கிறது. இதன் காரணமாகவே குளிர் பிரதேச நாய் இனங்களை வளர்ப்பதற்கு தமிழக அரசு தற்போது தடை விதித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+