சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகள் எண்ணிக்கை 360ஆக அதிகரிப்பு.. தனிமைப்படுத்தப்படும் தெருக்கள்
சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக சென்னையில் கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை 360ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில், கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38716 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் மட்டும், இன்று, மட்டும் 1406 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் கொரோனா பாதிப்பு உள்ள நபர்களின் வீடு, தெரு உள்ளிட்ட குறிப்பிட்ட பகுதிகளை முழுமையாக சென்னை மாநகராட்சி முழு கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அப்பகுதியில் உள்ள அனைவரையும் மிகுந்த கவனத்துடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. அவர்களை பரிசோதித்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறது மாநகராட்சி.
சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 78 தெருக்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. கோடம்பாக்கத்தில் 73 இடங்களும், திருவிக நகரில் 54 இடங்களும், பெருங்குடியில் 28, சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 26 பகுதிகள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன.
மாதவரத்தில் 20 இடங்களும், தண்டையார் பேட்டை 8, அம்பத்தூரில் 19 இடங்களும், அடையாரில் 13 இடங்களும் உள்ளன. மணலியில் 9 இடங்களும், ஆலந்தூரில் 7 இடங்களும், வளசரவாக்கத்தில், நெற்குன்றம் சக்தி நகர் என்ற 1 இடமும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
சென்னை–மும்பை தேசிய நெடுஞ்சாலையில் மூடப்பட்ட ஒரு வழிப்பாதை.. வாலாஜாபேட்டையில் தவிக்கும் வாகனங்கள் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்!












Click it and Unblock the Notifications