ரூ.9000 மாதம் கிடைக்கும் போஸ்ட் ஆபீஸ் திட்டம்.. அதிக வட்டி தரும் சூப்பரான சேமிப்பு திட்டம் பாருங்க
சென்னை: நிலையான வைப்பு (FDs) போன்ற பிற நிலையான வருமான ஆதாரங்களை விட அதிக வட்டி தரும், போஸ்ட் ஆபீஸ் திட்டம் பற்றி தெரியுமா? முதிர்வு காலத்தில் நிரந்தர வருமானம் தரும் ஓய்வூதிய திட்டத்தின் ஸ்பெஷாலிட்டிகள் என்னென்ன தெரியுமா
பணப்பாதுகாப்பு என்பது தற்போது தவிர்க்க முடியாததாகிவிட்டது.. அதனால்தான், சேமிக்க விரும்புவர்களுக்காகவே பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்கள் துவங்கி நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு மக்களிடம் பெரும் வரவேற்பு எப்போதுமே உள்ளது.

அரசுடைமை: இதற்கு காரணம், தபால் நிலையம் அரசுடையது.. நாம் முதலீடு செய்யும் பணம் பாதுகாப்பாக இருக்கும்.. உத்தரவாத வருமானம் கிடைக்கும்.. வட்டியும் நியாயமாகவே இருக்கும்.
அந்தவகையில், போஸ்ட் ஆபிஸ் திட்டங்களில், மாதாந்திர வருமானம் தரும் சூப்பர் திட்டமும் உள்ளது. அரசு நிறுவனங்களில் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்கும்.. ஆனால், மற்ற தனியார் ஊழியர்களுக்கு அப்படியில்லை.. எனவே, ஓய்வுக்கு பிறகு வருமானம் தரும் சேமிப்பு திட்டம்தான் இதுவாகும்.
வட்டி விகிதம்: இந்த போஸ்ட் ஆபீஸ் மாதந்திர வருமான திட்டத்தில் ஒருமுறை மட்டுமே முதலீடு செய்து, அதன் மூலம் கிடைக்கும் வட்டியின் அடிப்படையில் மாதந்திர வருமானம் பெறலாம்..
அதன்படி, ஒரேடியாக ரூ. 9 லட்சத்தை முதலீடு செய்துவிட்டால், இதில், மாத வருமானமாக ரூ.9,250 கிடைக்கும். இதில், தம்பதியராக சேர்ந்தே முதலீடு செய்யலாம்... இருவரும் சேர்ந்து ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யும்போது, மாதந்தோறும் அதே வருமானத்தை பெறலாம். குறைந்தபட்சமாக ரூ.1000 டெபாசிட் செய்து இந்த திட்டத்தில் இணையலாம். முதிர்வு காலத்திற்குப் பிறகு, அசல் தொகையையும் நீங்கள் திரும்பப் பெறலாம்.
மாத வருமானம்: இந்த திட்டத்திற்கு 7.4% வட்டி வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், மற்ற வங்கித் திட்டங்களுக்கு ஒப்பிடும்போது சிறந்த வருமானத்தை இந்த திட்டம் வழங்குகிறது. நிலையான வைப்பு (FDs) போன்ற பிற நிலையான வருமான ஆதாரங்களை விட அதிக வட்டி விகிதமாகும். நிலையான வைப்பு போன்ற பிற நிலையான வருமான திட்டங்களை விட மாதந்திர வருமான திட்டத்திற்கு அதிக வட்டி விகிதம் கிடைக்கிறது. அத்துடன் உறுதியான வருமானமும் உள்ளது.
தபால் அலுவலக மாதந்திர வருமான திட்டத்திற்கான முதிர்வு காலம் 5 வருடங்களாகும். இதனை 15 வருடங்கள் நீட்டிக்க முடியும்.... முன்கூட்டியே கணக்கை மூடவும் முடியும்.. ஒரு வருடம் கழித்து பணத்தை எடுக்கவும் முடியும்.. ஆனால், 3 வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால் முதலீட்டு தொகையிலிருந்து 2 சதவிகிதம் அபராதமாக செலுத்த வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 1 சதவீத விலக்குடன் பணத்தைப் பெறுவீர்கள்.
நிரந்தர வருமானம்: இந்த மாதாந்திர வருமான திட்டம், நிரந்தரமான வருமானம் தேவைப்படும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருப்பதுடன், உறுதியான வருமானமும் உள்ளதால், வாடிக்கையாளர்களின் அபிமானத்தை இந்த திட்டம் பெற்றுவருகிறது.
-
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்!












Click it and Unblock the Notifications