பின்னாடி இத்தனை விஷயம் நடந்து இருக்கா?.. பாக்யராஜ் பதவி விலக காரணம் என்ன?
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
Recommended Video
சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ்தான் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்தின் கதை பிரச்னையை தீர்த்து வைத்தது பாக்யராஜ்தான்.
தற்போது அதே பிரச்சனையால் அவர் பதவி விலகி இருக்கிறார். இதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படவில்லை.. ராஜினாமா கடிதத்தில் கே.பாக்யராஜ் பகீர்! ]
கடும் நெருக்கடி
சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. அவருக்கு அவர் இருக்கும் சினிமா துறையில் இருந்தே சில நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.
வீட்டில் பிரச்சனை
அதேபோல் வீட்டிலும் கூட இவருக்கு சில மனக்கஷ்டங்கள் வந்துள்ளது. மகன் சாந்தனு விஜயின் ரசிகர் என்பதால் வீட்டில் சிறிய மனக்கஷ்டம் வந்ததாக கூறப்படுகிறது. சாந்தனு இதை குறித்து டிவிட்டரில் கூட குறிப்பிட்டு இருந்தார். அவருடைய பதவி விலகலுக்கு பின் இதுவும் ஒரு காரணம்தான் என்று சொல்லப்படுகிறது.
ஒரு உறுத்தல் இருந்துள்ளது
அது மட்டுமில்லாமல் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிட்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவில்லை. நேரடியாக இவர் தலைவர் பதவிக்கு தேர்வானார். நேரடி பொறுப்பில் இருந்து இப்படி முடிவுகளை எடுப்பது அவருக்கு அவ்வளவு சௌகரியமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுவும் பதிவில் விலகலுக்கு ஒரு காரணம்.
யாரும் எதிராக பேசினார்களா?
இது எல்லாம் இல்லாமல், அவருக்கு சில மிரட்டல்கள் வந்தது என்றும் கூட கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சக்கூடிய ஆள் இல்லை பாக்யராஜ் என்றும் கூறுகிறார்கள். இது அவரது தனிப்பட்ட முடிவு, அவர் விரைவில் வேறு சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கிறார்கள்.