பின்னாடி இத்தனை விஷயம் நடந்து இருக்கா?.. பாக்யராஜ் பதவி விலக காரணம் என்ன?
தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
Recommended Video

சென்னை: தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தில் இருந்து இயக்குனர் பாக்யராஜ் பதவி விலகி உள்ளார்.
சர்கார் பட கதை பிரச்சனையில் பாக்யராஜ்தான் மிக முக்கியமான திருப்பங்களை ஏற்படுத்தி கொடுத்து இருக்கிறார். விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள சர்கார் படத்தின் கதை பிரச்னையை தீர்த்து வைத்தது பாக்யராஜ்தான்.
தற்போது அதே பிரச்சனையால் அவர் பதவி விலகி இருக்கிறார். இதற்கு பின் நிறைய காரணங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
[ஏ.ஆர். முருகதாஸிடம் கெஞ்சியும் உடன்படவில்லை.. ராஜினாமா கடிதத்தில் கே.பாக்யராஜ் பகீர்! ]

கடும் நெருக்கடி
சர்கார் கதை பிரச்சனை தொடர்பாக இயக்குனர் பாக்யராஜ் கடுமையான நெருக்கடியை சந்தித்ததாக கூறியுள்ளார். ஆனால் அவர் என்ன மாதிரியான நெருக்கடிகளை சந்தித்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கவில்லை. அவருக்கு அவர் இருக்கும் சினிமா துறையில் இருந்தே சில நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.

வீட்டில் பிரச்சனை
அதேபோல் வீட்டிலும் கூட இவருக்கு சில மனக்கஷ்டங்கள் வந்துள்ளது. மகன் சாந்தனு விஜயின் ரசிகர் என்பதால் வீட்டில் சிறிய மனக்கஷ்டம் வந்ததாக கூறப்படுகிறது. சாந்தனு இதை குறித்து டிவிட்டரில் கூட குறிப்பிட்டு இருந்தார். அவருடைய பதவி விலகலுக்கு பின் இதுவும் ஒரு காரணம்தான் என்று சொல்லப்படுகிறது.

ஒரு உறுத்தல் இருந்துள்ளது
அது மட்டுமில்லாமல் பாக்யராஜ் தேர்தலில் போட்டியிட்டு தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் தலைவராகவில்லை. நேரடியாக இவர் தலைவர் பதவிக்கு தேர்வானார். நேரடி பொறுப்பில் இருந்து இப்படி முடிவுகளை எடுப்பது அவருக்கு அவ்வளவு சௌகரியமாக இல்லை என்றும் கூறப்படுகிறது. இதுவும் பதிவில் விலகலுக்கு ஒரு காரணம்.

யாரும் எதிராக பேசினார்களா?
இது எல்லாம் இல்லாமல், அவருக்கு சில மிரட்டல்கள் வந்தது என்றும் கூட கோலிவுட் வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். ஆனால் மிரட்டலுக்கு எல்லாம் அஞ்சக்கூடிய ஆள் இல்லை பாக்யராஜ் என்றும் கூறுகிறார்கள். இது அவரது தனிப்பட்ட முடிவு, அவர் விரைவில் வேறு சில முக்கிய முடிவுகளை எடுப்பார் என்று தெரிவிக்கிறார்கள்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications