இனி தாம்பரம் மட்டுமல்ல.. பல்லாவரம், சோழிங்கநல்லூரிலும்.. தமிழ்நாடு மின்சார வாரியம் மேஜர் முடிவு
சென்னை: தாம்பரம் மின்சார கோட்டம் தாம்பரம், பல்லாவரம் மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய 3 கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு கோட்டங்களுக்கும் தனித்தனியாக அலுவலகங்கள் பிரிக்கப்பட்டுள்ளது. எந்த ஊர் எந்த கோட்டத்தில் வரும் என்பதை பார்ப்போம்.
சென்னையின் புறநகர் பகுதியான தாம்பரம் மின்கோட்டம் மிகப்பெரியது ஆகும். சென்னையில் மடிப்பாக்கத்திற்கு அடுத்துள்ள பகுதிகள்,விமான நிலையத்தை தாண்டி உள்ள பகுதிகள் அந்த பக்கம் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட ஓஎம்ஆர், ஐடி காரிடர் சாலைகளின் பல பகுதிகள் தாம்பரம் கோட்டத்தில் தான் வரும். சென்னை மற்றும் தாம்பரம் பகுதியில் மின்சார வாரியம் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் போது மற்ற ஊர்களை போல் காலை முதல் மாலை வரை மின்சாரத்தை ரத்து செய்யாது. காலை 9 மணிக்கு ஆரம்பித்து 2 மணிக்குள் முடித்துவிடும். அதுவும் பகுதி பகுதியாகவே பணிகள் மேற்கொள்ளப்படும்.

தற்போது தாம்பரம் மின் கோட்டம் மிகப்பெரியதாக உள்ள நிலையில், அதனை 3 ஆக பிரித்து தமிழ்நாடு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி தாம்பரம், பல்லாவரம், சோழிங்கநல்லூர் என 3 கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் எந்த ஊர் எந்த கோட்டத்தில் வரும் என்பதை பார்ப்போம்
அதன்படி தாம்பரம் உபகோட்டத்தில் தாம்பரம் மேற்கு, முடிச்சூர் மற்றும் பெருங்களத்தூர் ஆகிய பிரிவு அலுவலகங்களும், சேலையூர் உபகோட்டத்தில் இரும்புலியூர், தாம்பரம் கிழக்கு, சிட்லப்பாக்கம், சேலையூர் மற்றும் மாடம்பாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்களும், செம்பாக்கம் உபகோட்டத்தில் செம்பாக்கம், நேரு நகர் மற்றும் கடப்பேரி அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
பல்லாவரம் கோட்டத்தில் பல்லாவரம் உப கோட்டத்துக்கு கீழ்கட்டளை, பல்லாவரம் கிழக்கு மற்றும் பல்லாவரம் மேற்கு ஆகிய பிரிவு அலுவலகங்களும், பம்மல் உபகோட்டத்துடன் பம்மல், அனாகாபுத்தூர், பொழிச்சலூர் மற்றும் குரோம்பேட்டை ஆகிய பிரிவு அலுவலகங்களும், ராதா நகர் (கடப்பேரி) உப கோட்டத்துக்கு ராதா நகர், நியூ காலனி மற்றும் அஸ்தினாபுரம் ஆகிய பிரிவு அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் கோட்டத்தில் மேடவாக்கம் உபகோட்டத்துக்கு மேடவாக்கம், புதிதாக பிரிக்கப்பட்ட நன்மங்கலம், ஜல்லடியான் பேட்டை மற்றும் கவுரிவாக்கம் ஆகிய பிரிவு அலுவலகங்களும், பள்ளிக்கரணை உப கோட்டத்துக்கு (புதிய உபகோட்டம்) கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர் (புதிய பிரிவு) (எஸ். கொளத்தூர்), பள்ளிக்கரணை மற்றும் நாராயணபுரம் (புதிய பிரிவு) ஆகிய பிரிவு அலுவலகங்களும், சிட்லபாக்கம் உப கோட்டத்தில் சிட்லபாக்கம் அரசன்கலனி (புதிய பிரிவு) மற்றும் பெரும்பாக்கம் (புதிய பிரிவு) ஆகிய பிரிவு அலுவலகங்களும் இணைக்கப்பட்டுள்ளது என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications