மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: மாவட்டங்களில் வளர்ச்சிப் பணிகளை துரிதப்படுத்த புதிய பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுவரை திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக இருந்த சக்கரபாணி, டி.ஆர்.பி.ராஜா அமைச்சரானதால் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக மாற்றப்பட்டுள்ளார்.
மேலும், இது தொடர்பான தமிழக அரசின் அறிவிப்பு விவரம் வருமாறு;
அ) கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு ஆர். காந்தி, மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.

திருவாரூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திரு அர. சக்கரபாணி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் அமைச்சர் அவர்கள் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
இ) மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களின் பொறுப்பு அமைச்சராக இருந்த திரு சிவ. வீ. மெய்யநாதன், மாண்புமிகு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் அவர்கள் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு மட்டும் பொறுப்பு அமைச்சராக செயல்படுவார். ஈ) திரு எஸ். ரகுபதி, மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் நாகப்பட்டினம் மாவட்ட பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்படுகிறார்.
வருவாய் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களாக நியமனம் செய்யப்பட்ட மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள், மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் (District Monitoring Officers) மற்றும் அனைத்துத் துறைகளை சார்ந்த அலுவலர்களுடன் ஒருங்கிணைந்து, திட்டப் பணிகளை துரிதப்படுத்துதல், நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு சென்றடைவதை கண்காணித்தல் மற்றும் தேவையான ஆலோசனைகள் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
ஏற்கனவே தஞ்சைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ், சேலத்துக்கு அமைச்சர் கே.என்.நேரு, கோவைக்கு செந்தில்பாலாஜி, நெல்லைக்கு ராஜகண்ணப்பன், ராமநாதபுரத்துக்கு தங்கம் தென்னரசு, தென்காசிக்கு கே.கே.எஸ்.எஸ்.ஆர்., என பொறுப்பு அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications