பிரதமர் பேச்சில் இருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது.. சு.வெங்கடேசன் ட்வீட்!
சென்னை: மணிப்பூர் கலவரம் குறித்து 79 நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் ஏற்பட்ட கவலரம் தற்போது வரை நீடிக்கிறது.

இந்நிலையில் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, எதிர் தரப்பினர் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தின் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, "ஜனநாயகத்தின் கோவிலுக்கு அருகில் நிற்கும் என் இதயம் முழுதும் கோபமும் வலியும் நிறைந்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது.
மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்து 79 நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக நேற்றுத்தான் இச்சம்பவம் குறித்து மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த 2 மாதங்களாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த வீடியோவிற்குப் பிறகுதான் மவுனம் கலைத்தார் மோடி.
முதலைக் கண்ணீர்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 21, 2023
79 நாட்கள் ஆகி இருக்கிறது 56 இன்ச் அகலத் தோலைக் கிழித்து வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு...
- டெலிகிராப் இதழ் -
மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலம் ஆன பிறகு
பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக்கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது. pic.twitter.com/H00hdXQBxk
இந்த நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக மணிப்பூர் சம்பவம் குறித்துப் பேசியது தொடர்பாக தி டெலிகிராப் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடங்கி 79 நாட்களுக்குப் பிறகு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடியின் பேச்சை முதலைக்கண்ணீர் என விமர்சித்துள்ளது தி டெலிகிராஃப் இதழ்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "79 நாட்கள் ஆகி இருக்கிறது 56 இன்ச் அகலத் தோலைக் கிழித்து வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு... மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலம் ஆன பிறகு... பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக்கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது." என விமர்சித்துள்ளார்.
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications