பிரதமர் பேச்சில் இருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது.. சு.வெங்கடேசன் ட்வீட்!
சென்னை: மணிப்பூர் கலவரம் குறித்து 79 நாட்களுக்குப் பிறகு பிரதமர் மோடி பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக் கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் வசிக்கும் மைத்தேயி இனத்தவர் தங்களை பழங்குடியின பட்டியலில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு குக்கி பழங்குடி இன மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் ஏற்பட்ட கவலரம் தற்போது வரை நீடிக்கிறது.

இந்நிலையில் மணிப்பூரின் காங்போக்பி மாவட்டத்தில், குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 2 பெண்களை, எதிர் தரப்பினர் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்ற வீடியோ வெளியாகி நாடு முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு நாடு முழுவதுமுள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மணிப்பூர் விவகாரம் குறித்து நேற்று நாடாளுமன்றத்தின் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பிரதமர் மோடி, "ஜனநாயகத்தின் கோவிலுக்கு அருகில் நிற்கும் என் இதயம் முழுதும் கோபமும் வலியும் நிறைந்துள்ளது. மணிப்பூரில் நடைபெற்ற சம்பவம் எந்த நாகரீக சமூகத்துக்கும் அவமானகரமானது.
மணிப்பூரில் பெண்கள் அவமதிக்கப்பட்ட சம்பவம், இந்தியாவிலுள்ள 140 கோடி மக்களையும் அவமானத்தில் ஆழ்த்தியுள்ளது. மணிப்பூரின் மகள்களுக்கு ஏற்பட்டதை மன்னிக்கவே முடியாது. எந்த குற்றவாளிகளும் தப்பமாட்டார்கள் என நாட்டு மக்களுக்கு நான் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
மணிப்பூரில் இனக் கலவரம் வெடித்து 79 நாட்களுக்குப் பிறகு, முதல் முறையாக நேற்றுத்தான் இச்சம்பவம் குறித்து மவுனம் கலைத்தார் பிரதமர் மோடி. மணிப்பூர் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடி வாய்திறக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கடந்த 2 மாதங்களாக வலியுறுத்தி வந்த நிலையில் இந்த வீடியோவிற்குப் பிறகுதான் மவுனம் கலைத்தார் மோடி.
முதலைக் கண்ணீர்
— Su Venkatesan MP (@SuVe4Madurai) July 21, 2023
79 நாட்கள் ஆகி இருக்கிறது 56 இன்ச் அகலத் தோலைக் கிழித்து வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு...
- டெலிகிராப் இதழ் -
மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலம் ஆன பிறகு
பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக்கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது. pic.twitter.com/H00hdXQBxk
இந்த நிலையில், பிரதமர் மோடி முதல் முறையாக மணிப்பூர் சம்பவம் குறித்துப் பேசியது தொடர்பாக தி டெலிகிராப் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. மணிப்பூர் கலவரம் தொடங்கி 79 நாட்களுக்குப் பிறகு வருத்தம் தெரிவித்த பிரதமர் மோடியின் பேச்சை முதலைக்கண்ணீர் என விமர்சித்துள்ளது தி டெலிகிராஃப் இதழ்.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், "79 நாட்கள் ஆகி இருக்கிறது 56 இன்ச் அகலத் தோலைக் கிழித்து வலியையும், வேதனையையும் உணர வைப்பதற்கு... மணிப்பூரில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி அம்பலம் ஆன பிறகு... பிரதமர் பேசிய வசனத்திலிருந்து சிந்திய முதலைக்கண்ணீரை உலகமே பார்த்து சிரிக்கிறது." என விமர்சித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications