அதிர்ச்சி.. மத்திய பல்கலையில் அதிகரிக்கும் தற்கொலைகள்.. தமிழகத்தில் இத்தனை மாணவர்களா? ஷாக் ரிப்போர்ட்
சென்னை: தேசிய அளவில் கடந்த 5 ஆண்டுகளில் மத்தியப் பல்கலைக்கழகங்களில் தற்கொலைகள் அதிகரித்து வருவதாகவும், தமிழ்நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில்தான் இந்த தற்கொலைகள் அதிகரித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் நிகழும் தற்கொலைகள் குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இந்த ஆய்வில் தமிழ்நாடு, டெல்லி மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இயங்கும் மத்திய பல்கலைக்கழகங்களில் தற்கொலைகள் அதிகரித்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 4 மத்திய பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இதில் கடந்த 6 ஆண்டுகளில் சுமார் 10 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

தேசிய அளவில் மொத்தம் கடந்த 2018ம் ஆண்டு மட்டும் 20 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர். இதற்கடுத்து 2019ம் ஆண்டு 20 மாணவர்கள், 2020ம் ஆண்டு 13 மாணவர்கள் 2021ம் ஆண்டு 13 பேர் என இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இதில் 2020 மற்றும் 2021ம் ஆண்டு கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்த தற்கொலைகள் குறைந்துள்ளன. இதனையடுத்து 2022ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முடிய 15 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். எனவே இந்த தற்கொலைகள் குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம் என்று கல்வியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications