பெங்களூரு வாழ் தமிழர்களே.. தீபாவளிக்கு ஊருக்கு வரப்போறீங்களா.. தமிழக அரசு சூப்பர் அறிவிப்பு
சென்னை: தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பேருந்தில் பயணிக்க ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ளது.
முதற்கட்டமாக தமிழகத்தில் இருந்து 20 பேருந்துகள் கர்நாடாகவுக்கு இன்று இயக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வரும் நவம்பர் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஊருக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றும் நாளையும் பல்லாயிரம் பேர் சொந்த ஊருக்கு செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் லட்சக்கணக்கான தமிழர்கள் வசிக்கிறார்கள். இவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.

16வரை பதிவு தேவையில்லை
தற்போதைய நிலையில் கர்நாடகாவில் இருந்து தமிழகம் வர ஆன்லைன் பதிவு கட்டாயமாக்கப்பட்டு இருந்தது. தற்போது தீபாவளியை முன்னிட்டு நேற்று முதல் 16ம் தேதி வரை பேருந்தில் ஆன்லைன் பதிவு கட்டாயமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு
தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில். தமிழ்நாட்டிற்கும் கர்நாடகாவிற்கும் இடையில் பேருந்து சேவைகளை இயக்க ஒப்புதல் அளிக்குமாறு மாநில போக்குவரத்து நிறுவனங்களால் கோரிக்கை வைத்தன. இதை கவனமாக பரிசீலித்த பின், கர்நாடாகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையில் பேருந்து சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

அரசு அனுமதி
நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி 6 நாட்களுக்கு அதாவது நேற்று முதல் 16ம் தேதி வரை ஆன்லைன் பதிவு இல்லாமல் இயக்க அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பதிவு ரத்து
இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ‘தமிழகம் மற்றும் கர்நாடகா இடையே பஸ்களை இயக்குவதற்கு ஆன்லைன் பதிவு தேவையில்லை என அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் இருந்து ஓசூர் வரை பஸ்கள் இயக்கப்பட்டது. இந்த உத்தரவைத்தொடர்ந்து முதற்கட்டமாக இன்று 20 பஸ்கள் கர்நாடாகவுக்கு இயக்கப்படுகிறது' என்றார். எனினும் கூடுதல்பேருந்துகள் இயங்கி தமிழகர்கள் அதிக அளவில் சொந்த ஊருக்கு வந்து செல்ல வசதி ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதேபோல் கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்லவும் அரசு ஆன்லைன்பதிவு கட்டாயம் என்பதை நீக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
-
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
மதுரையை சேர்ந்தவர்.. கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாரின் செயலாளராக தமிழர் நியமனம்.. யார் இவர்? -
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
மாணவிகளுக்கு மட்டுமில்லை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவருக்கும் இலவச பஸ் பாஸ்! டிகே சிவகுமார் பலே -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
CBSE உள்பட தனியார் பள்ளிகளில் கல்வி கட்டணத்தை கேட்டிலேயே எழுதி வைக்க வேண்டும்.. தமிழகத்தில் உத்தரவு












Click it and Unblock the Notifications