சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கூடாது.. அரசுக்கு மருத்துவக்குழு அளித்த 2 முக்கிய பரிந்துரைகள்
சென்னை: கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் சென்னைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அறிவிக்கப்பட்ட நாடு தழுவி லாக்டவுன் 4முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் மே 31ம் தேதியுடன் இந்த லாக்டவுனும் முடிய உள்ளது. லாக்டவுன் முடிய உள்ள போதிலும் தமிழகத்தில் சென்னை உள்பட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கொரோனா பாதிப்பு 11 ஆயிரத்தை கடந்து விட்டது.

கொரோனா பாதிப்பு அதிகரிப்புக்கு ஊரடங்கு தளர்வு காரணமாக இருக்கலாம் என்பது ஒரு கருத்தாக உள்ளது. இந்நிலையில் கொரோனா சிகிச்சையை மேம்படுத்தவும், கொரோனா பரவலை தடுக்க அரசுக்கு ஆலோசனைகளை வழங்கவும் சிறப்பு மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசால் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவுடன் நாளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தினார்.. அப்போது 5ம் கட்டமாக லாக்டவுனை தமிழகத்தில் நீட்டிப்பது குறித்து ஆலோசித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் உள்பட முக்கிய அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
இந்த குழுவிடம் கொரோனாவை கட்டுப்படுத்துவது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான காரணம், கொரோனாவை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்தினார்.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு ஊரடங்களில் எந்த தளர்வும் அறிவிக்கக்கூடாது என்று தமிழக அரசுக்கு மருத்துவ நிபுணர்கள் குழு கூட்டத்தில் பரிந்துரைத்துள்ளது. பிற மாவட்டங்களை விட சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கக் கூடாது என்றும் மருத்துவ நிபுணர்கள் குழு தெரிவித்துள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications