3-வது அணிக்கான கதவை இழுத்து மூடினார் மு.க.ஸ்டாலின்!
Recommended Video
சென்னை: லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் தேசிய அளவில் 3-வது அணி அமைய வாய்ப்பு இருப்பதாகத் தெரியவில்லை என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனால் 3-வது அணிக்கான கதவை திமுக இழுத்துமூடிவிட்டது என்பத உறுதியாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம்தான் ஏற்படும் என்று கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் ஆதரவுடன் மாநிலக் கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க முயற்சித்து வருகின்றன. இதற்கான ஒருங்கிணைப்பை மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி மேற்கொண்டு வருகிறார்.
தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை தக்க வைப்போம் என பாஜக கூறி வருகிறது. அதே நேரத்தில் இம்முறை தங்களுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்பதை பாஜக உணர்ந்தே உள்ளது. இதனால் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி, பிஜூ ஜனதா தளம் ஆகிய கட்சிகளின் ஆதரவை கோரி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

சந்திரசேகராவ் முயற்சி
அத்துடன் காங்கிரஸ் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைவதைத் தடுக்கும் வகையில் 3-வது அணியை உருவாக்கும் முயற்சியிலும் பாஜக இறங்கியுள்ளது. பாஜகவின் முகமாக சந்திரசேகர ராவ் இம்முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

ஸ்டாலின் - சந்திரசேகர ராவ் சந்திப்பு
இதன் ஒரு பகுதியாக சென்னையில் திமுக தலைவர் ஸ்டாலினை சந்திரசேகர ராவ் நேற்று சந்தித்தது தேசிய அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று மட்டுமே திமுக தலைமை அறிவித்தது. அத்துடன் இரு தலைவர்களின் சந்திப்புக்குப் பின் எந்த ஒரு செய்தியாளர் சந்திப்பும் நடத்தப்படவில்லை.

காங்கிரஸ் அணிக்கு வர அழைப்பு
3-வது அணிக்கு வருமாறு சந்திரசேகராவ் விடுத்த அழைத்த நிராகரித்த ஸ்டாலின், காங்கிரஸ் அணியில் இணையவே அவரிடம் வலியுறுத்தினார் என அறிவாலய வட்டாரங்கள் நம்மிடம் தெரிவித்தன. இருப்பினும் 3-வது அணியில் திமுக இணையக் கூடும் என்கிற தகவல்களும் ஊடகங்களால் வெளியிடப்பட்டன.

ஸ்டாலின் பேட்டி
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த மு.க.ஸ்டாலின் கூறியதாவது: தேசிய அளவில் 3-வது அணி அமைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தெரியவில்லை.

ஸ்டாலின் திட்டவட்டம்
சந்திரசேகராவுடனான சந்திப்பு என்பது மரியாதை நிமித்தமானது மட்டுமே. 3-வது அணியை உருவாக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சென்னைக்கு சந்திரசேகர ராவ் வரவில்லை என்றார். இதனையடுத்து 3-வது அணிக்கான கதவுகளை திமுக இழுத்து மூடிவிட்டது என்பது திட்டவட்டமாக தெரியவந்துள்ளது.
-
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ் -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது!












Click it and Unblock the Notifications