ஏற்றத்தாழ்வை எதிர்த்தவர் முஹம்மது நபி.. மீலாது நபியை உலக சகோதரத்துவ நாளாக கடைபிடிப்போம் -திருமாவளவன்
சென்னை: நபிகள் நாயகம் பிறந்தநாளான மீலாது நபி நாள் 'உலக சகோதரத்துவ நாளாகக்' கடைபிடிப்போம் என இஸ்லாமியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து இருக்கிறார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தியில், "நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாது நபி தினத்தில் இஸ்லாமியப் பெருங்குடி மக்கள் யாவருக்கும் விசிக சார்பில் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1400 ஆண்டுகளுக்கு முன்னர் இம்மண்ணுலகில் தோன்றிய மகான் நபிகள் நாயகம் ஒட்டுமொத்த மனிதகுலத்தையும் நல்வழிப்படுத்த மகத்தான நன்னெறிகளைப் போதித்தார். இறையச்சத்தின் மூலமே மனிதகுலத்தை நல்வழிப்படுத்த இயலும் என்பது அவரின் நம்பிக்கையாகும். இறைவனுக்கு மட்டுமே அஞ்சுதல் வேண்டும் என போதித்த நபிகள் நாயகம் வேறு எதற்காகவும் அஞ்சிட தேவையில்லை என்றும்; குறிப்பாக, மனிதனுக்கு மனிதன் அஞ்சவே கூடாதென்றும் போதனைகள் வழங்கினார்.
இறைவனுக்கு மனித வடிவத்தில் உருவம் அமைப்பதும் அதனையே இறைவனென்று நம்பி வணங்குவதும் உண்மையான இறைவழிபாடு ஆகாதென்று வலுவாக நம்பியவர். அதனால், இறைவனுக்கு இணை வைத்தலும் உருவ வழிபாடும் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் போதித்தவர். இறைவனுக்கு உருவம் படைப்பது இறைவனை அவமதிப்பதாகும் என போதித்த அவர், தன்னையும் முன்னிறுத்தாத உயர்நெறியை வழங்கியவர்.
இறைவனுக்கு உருவம் படைக்கக் கூடாதென கூறிய அவர், தனது உருவத்தையும் எத்தகைய சூழலிலும் முன்னிறுத்தக் கூடாதென வலியுறுத்தினார். அந்த அடிப்படைக் கருத்தியலை எக்காலத்திலும் திரித்துவிடக் கூடாது என்பதை உறுதிப்படுத்தியவர். இன்றும் அத்தகைய திரிபுநிலை அடையாத ஒரு கோட்பாடாகவே இஸ்லாம் விளங்குகிறது.
இதுவே நபிகள் நாயகம் அவர்களின் இணையற்ற தலைமைத்துவத்திற்கு மகத்தான சான்றாகும். அத்துடன், சகோதரத்துவமே மானுடத்தின் மீட்சிக்கு அடிப்படை என்பதைப் போதித்தவர். உலக மாந்தர்கள் யாவரும் உயர்வு - தாழ்வு என்னும் பாகுபாடுகளின்றி, பகை - மோதல் ஏதுமின்றி ஒரே குலமாக வாழ்வதற்கு சகோதரத்துவம் தான் இன்றியமையாதது என வலியுறுத்தியவர்.
அத்தகைய சகோரத்துவத்தை இன்றும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்குரிய மகத்தான வழிகாட்டுதலை வழங்கிய மகான் நபிகள் நாயகம். இத்தகு மகத்தான தலைமைத்துவ ஆற்றல் வாய்ந்த மகானின் பிறந்தநாளான 'மீலாது நாளை' "உலக சகோதரத்துவ நாளாக' கடைபிடிப்போம். சகோதரத்துவத்தைப் போற்றும் யாவருக்கும் விசிக சார்பில் மீலாது நபி தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications