Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆணவக் கொலை வன்முறை இல்லைனு சொல்றது அறியாமை! நடிகர் ரஞ்சித்தை விமர்சித்த திருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆணவக் கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுவதாக நடிகர் ரஞ்சித்தின் பேச்சுக்கு திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார். ஆணவக் கொலை வன்முறை அல்ல, அது ஒரு அக்கறைதான் என நடிகர் ரஞ்சித் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார்.

சுயமரியாதை திருமணம், ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி போன்றவைகளுக்கு எதிராக கருத்து தெரிவித்து வந்த நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் படம் திரையரங்குகளில் வெளியானது.

thirumavalavan actor ranjith honour killing

குறிப்பிட்ட சாதியினரை பற்றி மோசமான கருத்துகள், சாதிய பாகுபாட்டை ஊக்குவிக்கும் கருத்துகள் இந்த படத்தில் இடம்பெற்றிருந்ததாக டிரெய்லர் வெளியானது முதலே விமர்சனங்கள் எழுந்தன.

இதற்கு ரஞ்சித் பதிலடி கொடுக்கும் வகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசினார். நாடகக் காதல் நடத்தி வைக்கவே சில கும்பல், அலுவலகம் அமைத்து வேலை செய்வதாகவும் தான் நாடக காதல் என சொல்லும் போது மட்டும் தன்னை ஜாதி வெறியனாக பார்க்கிறார்கள் என்றும் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் சேலம் மாவட்டம் கருப்பூரில் உள்ள தியேட்டரில் கவுண்டம்பாளையம் படத்தை நடிகர் ரஞ்சித் தனது படக் குழுவுடன் பார்த்தார். அப்போது கவுண்டம்பாளையம் படத்தில் தேவையற்ற காட்சிகள் இருப்பதாக கூறி என்னை எதிர்ப்பவர்கள் படம் பார்க்காமல் பேசக் கூடாது.

என்னை நேரடியாக எதிர்க்க முடியாமல் புறமுதுகில் குத்துவது போல் செயல்படுகிறார்கள். ஆணவக் கொலை குறித்து கேட்கிறீர்கள். பெற்றவர்களுக்குதான் வலி தெரியும். பைக்கை திருடி சென்றாலே உடனே போய் அடிப்பதில்லையா? பெற்ற பிள்ளையே வாழ்க்கை என இருப்பவர்கள் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது என அக்கறையினால் வரும் கோபம் தான் அது, வன்முறை அல்ல என கூறினார்.

ஜாதி ஆணவக் கொலைகளை தடுப்பதற்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் நடிகர் ரஞ்சித் ஆணவக் கொலையை நியாயப்படுத்தும் விதமாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ரஞ்சித்தின் கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ராமசந்திர ஆதித்தனாரின் 90ஆவது பிறந்தநாளையொட்டி சென்னை ஆயிரம் விளக்கு அண்ணா சாலையில் உள்ள மாலை முரசு அலுவலகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மலர்த் தூவி மரியாதையை செலுத்தினார். பின்னர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது ஆணவக் கொலை குற்றமில்லை என்பது அறியாமையை காட்டுகிறது. படம் எடுத்து லாபம் சம்பாதிக்க சிலர் சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசி வருகிறார்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிராக பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல. ஆம்ஸ்ட்ராங் படுகொலையை வைத்து அரசியல் நகர்வுகளை நடத்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு விருப்பமில்லை. அவரது கொலைக்கு நியாயமான நீதி கிடைக்க வேண்டும் என திருமாவளவன் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+