எச்.ராஜாவின் இன்னொரு குரல்.. விஜய் பேச்சில் திமுக வெறுப்பு மட்டுமே இருக்கு.. திருமாவளவன் விமர்சனம்!
சென்னை: தவெக தலைவர் விஜய் மற்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரின் பேச்சை எச்.ராஜா மற்றொரு குரலாகவே பார்க்கிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். விஜய்யின் ஒவ்வொரு நிகழ்வும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாக கொண்டுள்ளதாக கூறிய திருமாவளவன், விஜய்யின் திட்டம், நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
ஈரோட்டில் தவெக தலைவர் விஜய் பேசுகையில், அண்ணாவும், எம்ஜிஆர்-ம் தமிழ்நாட்டின் சொத்து. அவர்களை பயன்படுத்துவதை பற்றி யாரும் புகார் சொல்லக்கூடாது. அதேபோல் களத்திலேயே இல்லாதவங்களையும் களத்திற்கும் அவர்களுக்கும் சம்மந்தமே இல்லாதவர்களையும் தவெக எதிர்க்கப் போவதில்லை. நீங்கள் கேட்குறீங்க என்பதற்காக எல்லாம் எதிர்க்க முடியாது.

எங்களுக்கு நிறையா வேலை இருக்கு. எம்ஜிஆர், ஜெயலலிதா சொல்லியதை போல் திமுக ஒரு தீய சக்தி.. தீய சக்தி.. தீய சக்தி.. தவெக ஒரு தூயசக்தி என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து விசிக தலைவர் திருமாவளவன் பேசுகையில், 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
இத்தனை ஆண்டுகளாக மகாத்மாக் காந்தி பெயரால் இயங்கி கொண்டு வந்த ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மாற்றப்பட்டுள்ளது. பாஜகவின் தரம் தாழ்ந்த அரசியல் செய்வதற்கு வேறு சான்று தேவையில்லை. பாஜகவின் அற்பமான அரசியல் இது. உலகம் முழுவதும் அங்கீகரிக்கப்பட்ட தலைவர் மகாத்மா காந்தி. அவருடன் எங்களுக்கு கருத்து முரண்பாடு இருந்தாலும், விடுதலை போராட்டத்தை மதிக்கிறோம்.
அதனால் பெயர் மாற்றம் செய்யப்பட்டதை கண்டிக்கிறோம். அதனால் டிசம்பர் 24ஆம் தேதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பாக நடக்கும் போராட்டத்தில் விசிக பங்கேற்கும். அதேபோல் விஜய்யின் ஒவ்வொரு செயல்பாடும், பேச்சும் திமுக வெறுப்பை மட்டுமே மையமாகக் கொண்டு உள்ளது. விஜய்க்கு நாட்டைப் பற்றியோ மக்கள் நலன்கள் பற்றியோ அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை.
திமுக வெறுப்பை மட்டுமே பரப்புரை செய்வதை தனது கடமையாகக் கொண்டு செயல்படுகிறார். இதனை மக்கள் கவனித்து வருகின்றனர். அவரது திட்டம், நோக்கம் என்ன என்பதை மக்கள் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக தேர்தலில் அது வெளிப்படும். நாங்கள் திமுகவிற்கு ஆதரவாகப் பேசுவதாகத் தோன்றும். திமுக மீது குற்றச்சாட்டுகளை தொடர்ந்து சொல்லியவர்கள் மக்களால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
அது வரலாறாக இருக்கிறது. ஜெயலலிதா, எச்.ராஜா ஆகியோர் சொன்னதையே விஜய்யும் பேசுகிறார். இன்னும் சொல்லப் போனால் எச்.ராஜாவின் மற்றொரு குரலாகத்தான் விஜய், சீமான் பேச்சு வெளிப்படுகிறது. இவர்கள் எல்லாம் யார் என்பது வெளிப்படையாகத் தெரிய வருகிறது. தேர்தல் நேரத்தில் தக்க பாடத்தை மக்கள் புகட்டுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
-
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
3 மாத மவுனத்துக்கு பிறகு ஜனநாயகன் பற்றி முதல்முறையாக பேசிய விஜய்.. ஆனால் பாஜக பற்றி ‘கப்சிப்’! -
முத்தம் கொடுத்து விஜய் சொன்ன வார்த்தை..விஜய் தான் பெரிய நம்பிக்கை! தவெக வேட்பாளர் ஸ்ரீநாத் ஓபன் டாக் -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
விஜயோடு சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்போம்! தமிழகத்தில் மத்திய அமைச்சரை வைத்து பல்ஸ் பார்க்கிறதா பாஜக? -
தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் யார்? எடப்பாடியை பின்னுக்கு தள்ளிய விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு! -
விஜய் சினிமாவை விட்டு விலக உண்மையான காரணம் இதுதான்! நேரடியாகவே சொன்னாரு! நடிகர் ஷியாம் ஓபன் -
Thirumavalavan: சிதம்பரம் இடைத்தேர்தல் செலவை திருமாவளவன் ஏற்பாரா? சீமான் கேள்வி -
தமிழ்நாட்டில் தேர்தலுக்கு பின் விஜய் ஆதரவை கோருவோம்.. என்டிஏ கூட்டணி ஆட்சி உறுதி.. ராம்தாஸ் அத்வாலே!












Click it and Unblock the Notifications