திருவள்ளுவருக்கு மீண்டும் காவி உடை.. ஆளுநர் மாளிகை செய்ததை பாருங்க.. வெடித்த சர்ச்சை
சென்னை: தமிழகத்தில் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிப்பது தொடர்பான சர்ச்சைகள் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்படும் நிலையில் விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடை அணிந்திருக்கும் போட்டோ இடம்பெற்றுள்ளது. இது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.
'உலக பொதுமறை' என அழைக்கப்படும் திருக்குறளை நமக்கு தந்தவர் திருவள்ளுவர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக திருவள்ளுவரை மையப்படுத்தி சர்ச்சைகள் எழுந்து வருகின்றன.

இதற்கு முக்கிய காரணம் திருவள்ளுவரின் உடை தான். தமிழ்நாடு அரசால் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட திருவள்ளுவரின் போட்டோவில் அவர் வெள்ளை நிற உடை அணிந்திருப்பார். ஒரு கையில் எழுத்தாணி, இன்னொரு கையில் ஓலைச்சுவடி வைத்திருப்பார்.
ஆனால் சமீபகாலமாக திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டு வருகிறது. பாஜக மற்றும் அதன் ஆதரவாளர்கள் திருவள்ளுவருக்கு காவி உடையில் இருக்கும் போட்டோக்களை சமூக வலைதளங்களில் பயன்படுத்தி வருவது சர்ச்சையை கிளப்பியது.
திருவள்ளுவருக்கு சாதி, மதம், மொழி போன்ற எந்தவொரு குறுகிய அடையாளமும் கிடையாது. இதனால் காவி உடை அணிவதை ஏற்காமல் திமுக உள்பட பிற கூட்டணி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் தான் இன்று மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் இனு்று திருவள்ளுவர் திருநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் உள்பட பலரும் பங்கேற்கின்றனர்.
இதற்கான விழா மேடையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் போட்டோ வைக்கப்பட்டுள்ளது. அந்த போட்டோவில் திருவள்ளுவர் காவி உடை மட்டுமின்றி நெற்றி நிறைய திருநீறு பூசியுள்ளார். கழுத்தில் ருத்ரசாட்ச மாலை அணிவித்துள்ளார். இது தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
ஆளுநர் மாளிகையில் திருவள்ளுவர் காவி உடையில் இருக்கும் போட்டோ பயன்படுத்துவது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பு ஆளுநராக இருந்த ஆர்என் ரவி இதுபோன்ற போட்டோக்களை பயன்படுத்தி அரசியல் கட்சிகளின் எதிர்ப்பை சம்பாதித்தார்.
தற்போது ஆர்என் ரவி மேற்கு வங்க மாநில ஆளுநராக பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு பதில் கேரளா ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார். இப்படியான சூழலில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பங்கேற்கும் திருவள்ளுவர் திருநாள் விழாவிலும் திருவள்ளுவருக்கு காவி உடை அணிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications