என்னோட அடுத்த மூவ் இதுதான்.. கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கொடுத்த அப்டேட்
சென்னை: விலங்குகள் நல ஆர்வலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி சமூக அக்கறையுடன் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில், பொதுக்கழிப்பிடங்களை தூய்மையாக பராமரிப்பது தொடர்பான 'டாய்லட் பெஸ்டிவல்' பற்றியும் பேசியிருக்கிறார்.
தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம், கால்நடை வளர்ப்பு மற்றும் கால்நடை அறிவியல் துறை, தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம், தமிழ்நாடு காவல் துறை, பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஆகியவை இணைந்து சென்னை திருவல்லிக்கேணி பகுதியில் குதிரைகளுக்கு மருத்துவ முகாம் திங்கள்கிழமை நடத்தின.

இந்த முகாமில், இந்த குதிரைகளுக்கு ஆண்டுதோறும் நோய்களை தடுப்பதற்கான தடுப்பூசி முறையாக செலுத்தப்படுகிறதா? உடல்நிலை எவ்வாறு உள்ளது? என்பதை கண்டறிவதற்காக 'மைக்ரோ சிப்' பொறுத்தப்பபட்டது. இந்த திட்டத்தை விலங்குகள் நல ஆர்வலரும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவியுமான கிருத்திகா உதயநிதி தொடங்கி வைத்திருக்கிறார். இதன் பின்னர் பேசிய கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் கூறியதாவது:-
சென்னையில் 160 குதிரைகள் உள்ளன. குதிரைகளுக்கு நிறைய ஊட்டசத்து பற்றாக்குறை உள்ளது. நிறைய வைரஸ் பாதிப்பு உள்ளது. குதிரைகளுக்கு டெட்டனஸ் ஊசி போடப்பட்டுள்ளது. பிற விலங்குகளை போலவே குதிரைகளுக்கும் அதே நோய்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கடற்கரையில் செல்லும் குதிரைகள் பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டு நிறைய இறந்துபோவதாக கேட்கிறீர்கள்..

மனிதர்களான நாம் தான் குப்பைகளை போடாம இருக்கனும். குப்பையை குப்பைத்தொட்டியில் போடவேண்டும். அந்த சிவிக் சென்ஸ் நம்மளுக்கு இருக்க வேண்டும். இதுபோன்ற செயலால் விலங்குகளுக்கு மட்டும் இல்லை நம்மையும் தான் பாதிக்கிறது. கடலில் பிளாஸ்டிக் செல்வதால் மீன்களை நாம் சாப்பிடும் போது நமக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.
இது உலகளாவிய பிரச்சினை..எல்லோரும் சேர்ந்துதான் இதை நாம் மாற்ற வேண்டும். குதிரை மட்டும் இன்றி பிற ஆடு, மாடு உள்லிட்ட விலங்குகளும் பேப்பர் உள்ளிட்டவற்றை சாப்பிடுவது பற்றி கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் அனைத்து துறைகளும் சேர்ந்து கூட்டு முயற்சியாகவே செய்து கொண்டு இருக்கிறோம். இது போக போக சரி பண்ணிவிடலாம் என்ற நம்பிக்கை உள்ளது.

ஏற்கனவே முன்னெடுத்த 'கக்கூஸ்' என்ற திட்டம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது. பெருநகர சென்னை மாநகராட்சியுடன் இணைந்து டாய்லட்ஸ்களை எப்படி கட்டுவது, கிளீனாக எப்படி வைப்பது என்பது குறித்து பிளான் பண்ணுகிறோம். அடுத்து இதைத்தான் பிளான் பண்ணுறோம். அடுத்து இந்த ஆண்டில் டாய்லட் பெஸ்டிவல் பிளான் பண்ணுறோம்" என்றார்.
-
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
கடும் கோபத்தில் மோடி.. சென்னை ரோடுஷோ - பிரசாரமே வேண்டாம்.. பாஜக தலைகளை பந்தாட தயாராகும் மேலிடம் -
Gold Price: ஒரே நாளில் 3,040 அதிகரிப்பு.. மீண்டும் உச்சம் தொடும் தங்கம் விலை.. அம்மாடியோவ்! நகை பிரியர்கள் ஷாக் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
சென்னை Red zone.. நாளை சென்னைக்கு வரும் பிரதமர் மோடி.. டிரோன்களுக்கு தடை.. கடும் பாதுகாப்பு! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
Bank of Baroda: பேங்க் ஆஃப் பரோடா வங்கியில் அதிகாரி வேலை.. 140 பணியிடங்கள்.. டிகிரி தகுதி தான்! -
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் வேலை.. டிகிரி + தமிழ் தெரிஞ்சா ஜாக்பாட்! மாதம் 85 ஆயிரம் சம்பளம்!












Click it and Unblock the Notifications