செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் செம சான்ஸ்.. இதை மட்டும் பண்ணுங்க.. லட்சம் லட்சமாக பணம் கொட்டும்!
சென்னை: செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாதத்திற்கு வெறும் ₹250 முதலீடு செய்வதன் மூலம், பெண் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பாதுகாக்கலாம். இது எப்படி சாத்தியம் என்பதை இங்கே பார்க்கலாம்.
இத்திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், கணக்கைத் தொடங்க பெரிய தொகை தேவையில்லை. வெறும் ₹250 இல் முதலீட்டைத் தொடங்கலாம். ஒரு நிதியாண்டில் அதிகபட்சமாக ₹1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். சில வருடங்கள் முதலீடு செய்ய முடியாவிட்டால், ₹50 அபராதம் செலுத்தி கணக்கை மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.

செல்வமகள் சேமிப்பு திட்டம்
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டத்தின் கீழ், குறைந்தபட்சம் 15 ஆண்டுகளுக்கு முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகள் நிறைவடைந்ததும் கணக்கு முதிர்ச்சியடையும், அப்போது முழுத் தொகையையும் பெற்றுக் கொள்ளலாம். 15 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோர்கள் கூடுதலாக முதலீடு செய்யத் தேவையில்லை. மீதமுள்ள 6 ஆண்டுகளுக்கு, கணக்கில் உள்ள தொகைக்கு வட்டி தொடர்ந்து வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் ₹64 லட்சம் நிதியை எவ்வாறு பெறுவது என்பதைப் பார்ப்போம். ஒவ்வொரு மாதமும் ₹11,550 முதலீடு செய்தால், ஆண்டுக்கு ₹1,38,600 டெபாசிட் செய்யப்படும். 15 ஆண்டுகள் தொடர்ந்து முதலீடு செய்வதன் மூலம், மொத்த வைப்புத் தொகை ₹20,79,000 ஆகும்.
இந்தத் தொகைக்கு 8.2% வட்டி விகிதத்தில், முதிர்ச்சியின் போது ₹64,01,082 மொத்தமாக கிடைக்கும். இதில், ₹43,22,082 வட்டியாகக் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வமகள் சேமிப்பு திட்டம், பிரதமர் நரேந்திர மோடியால் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி தொடங்கப்பட்டது. பெண்களின் சேமிப்பிற்காகவும், அவர்களது உயர் கல்வி, திருமணம் மற்றும் மருத்துவத் தேவைகளுக்காகவும் இத்திட்டம் கொண்டுவரப்பட்டது.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்டம்
மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு சேமிப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. அவற்றில் ஒன்றுதான் செல்வமகள் சேமிப்பு திட்டம். பெண்களின் எதிர்காலத்தை மனதில் கொண்டு, குறைந்த சேமிப்பில் அதிக வருமானம் தரும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தில் வட்டி மூலம் கணிசமான லாபம் கிடைப்பதால், பல பெற்றோர்கள் இதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர். பிரதமர் மோடி தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் ₹11,16,815 வரை சேமிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
10 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் பெயரில் இத்திட்டத்தைத் தொடங்கலாம். குழந்தை 10 வயதை அடைந்ததும், அவர்களது பெயருக்கு கணக்கை மாற்றிக் கொள்ளலாம். 15 ஆண்டுகள் வரை இத்திட்டத்தில் டெபாசிட் செய்யலாம், 21 ஆண்டுகளுக்குப் பிறகு முதிர்ச்சித் தொகையைப் பெற்றுக் கொள்ளலாம்.
சுகன்யா சம்ரித்தி யோஜனா திட்ட முதலீடு
இத்திட்டத்தில் மாதத்திற்கு ₹1000 அல்லது ₹2000 முதலீடு செய்ய முடியும். 8% வட்டி விகிதத்துடன், மாதத்திற்கு ₹2000 வீதம் 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு வட்டியுடன் சேர்த்து ₹11.16 லட்சம் கிடைக்கும்.
இந்தத் திட்டத்தில் குறைந்தபட்ச முதலீட்டுத் தொகை ₹1000 ஆகும். அருகிலுள்ள அஞ்சல் அல்லது வங்கிகளில் இந்தத் தொகையைச் செலுத்தி கணக்கைத் தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்குத் திருமணம் ஆகும் வரை பணத்தைச் செலுத்தலாம். அதிகபட்சமாக மாதத்திற்கு ₹1.5 லட்சம் வரை வைப்புத் தொகையாகச் செலுத்த முடியும்.
ஆண் குழந்தைகளுக்கான தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டமும் உள்ளது. இத்திட்டம் மூலம் ₹2 லட்சம் வருவாய் ஈட்ட முடியும். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் குறைந்த ஆபத்துள்ள நிலையான வருமானத் திட்டமாகும், மேலும் நாடு முழுவதும் உள்ள அஞ்சல் அலுவலகங்களில் கிடைக்கிறது.
ஆண் குழந்தைகளுக்கான இந்த அஞ்சலக சேமிப்புத் திட்டம், அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு சிறந்த அம்சங்கள் மற்றும் பலன்களுடன் உருவாக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் நிலையான மற்றும் உத்தரவாதமான வருமானத்தை அளித்து, சிறந்த வருவாயை உருவாக்க உதவுகிறது. தற்போது இத்திட்டம் ஆண்டுக்கு 7.7% வட்டி விகிதத்தில் கிடைக்கிறது.
-
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்?












Click it and Unblock the Notifications