பெரும்பாக்கத்தில் மது போதையில் நண்பர்கள் நடனம்.. இறுதியில் புழல் சிறைக்கு போக வைத்த சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த பெரும்பாக்கம் எழில்நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் யூ பிளாக்கில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவு இளைஞர் ஒருவர் இருந்த கோலம் ஆடிப்போக வைத்துள்ளது. ஒருவரின் இறுதிச்சடங்கில் மதுஅருந்துவிட்டு நடனமாடிய நண்பர்கள்,இப்போது கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னை பெரும்பாக்கம் எழில்நகர் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் யூ பிளாக்கில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் நள்ளிரவு வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது தலை மற்றும் உடம்பில் பலத்த காயங்கள் இருந்தது.

பெரும்பாக்கம் போலீசார் வாலிபர் உடலை பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி வழக்குப்பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார் நடத்திய விசாரணையில், பிணமாக கிடந்தவர், பெரும்பாக்கம், எழில்நகர் எஸ்.பிளாக்கை சேர்ந்த 25 வயதாகும் கார்த்திக் என்பது தெரியவந்தது.
பழைய குற்றவாளியான கார்த்திக், ஏற்கனவே பல குற்றங்களில் ஈடுபட்டு சிறைக்கு சென்று வந்தவர் ஆவார். கார்த்திக்குடன் அதே பகுதியை சேர்ந்த அவரது நண்பர்களான குமார் (27), விஜயகுமார் (28), சரத் என்ற சரத்குமார் (35), சரண்ராஜ் என்ற கோகுல் (29), மற்றொரு கார்த்திக் (26) ஆகியோர் பார்க்கில் குடிபோதையில் சண்டை போட்டார்களாம்.
இதையடுத்து தனிப்படை போலீசார் அதே பகுதியில் பதுங்கி இருந்த குமார், விஜயகுமார், சரத்குமார், சரண்ராஜ், மற்றொரு கார்த்திக் ஆகிய 5 பேரையும் கைது செய்து போலீஸ் நிலையம் அழைத்துசென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் இவர்கள் குடியிருக்கும் பகுதியில் ஒருவரது இறுதிச்சடங்கில் கார்த்திக் மற்றும் அவரது நண்பர்கள் மது குடித்துவிட்டு நடனம் ஆடியிருக்கிறார்களாம். அப்போது போதை இறங்கியதால் கார்த்திக் மது குடிக்க நண்பர் குமாரிடம் பணம் கேட்டாராம். அவர் மறுத்ததால் கார்த்திக், குமாரின் சட்டை பையில் கையை விட்டு பணத்தை எடுக்க முயற்சி செய்திருக்கிறாராம். அப்போது குமாரின் சட்டை பை கிழிந்துவிட்டதால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
பின்னர் அங்கிருந்த சென்ற குமார், சிறிது நேரம் கழித்து தனது நண்பர்களான விஜயகுமார், சரத்குமார், சரண்ராஜ், கார்த்திக் ஆகியோருடன் சேர்ந்து பார்க்கில் மது குடித்து கொண்டிருந்த கார்த்திக்கிடம் மீண்டும் தகராறு செய்தார்களாம். அப்போது கார்த்திக் தான் வைத்திருந்த மது பாட்டிலால் இவர்களை தாக்கினாராம். உடனே 5 பேரும் சேர்ந்து மது பாட்டில் மற்றும் கல்லால் கார்த்திக்கை சரமாரியாக தாக்கினர். இதில் அவர் மயங்கி விழுந்ததும், அங்கிருந்த பெரிய கல்லை எடுத்து அவரது தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடியதும் விசாரணையில் தெரியவந்தது. கைதான 5 பேர் மீதும் கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார், மேலும் இதுபற்றி விசாரித்து வருகிறார்கள். கைதானவர்கள் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications