குடியுரிமை சட்டத்துக்கு எதிர்ப்பு.. ஆலந்தூரில் தமிமுன் அன்சாரி தலைமையில் மாபெரும் பேரணி
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சென்னையில் தவ்ஹுத் ஜமாத் பேரணி நடைபெறுகிறது. எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் நடைபெறுகிறது. டெல்லி, உத்தரப்பிரதேசம், தமிழகம்,மேற்கு வங்கம் உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் நடைபெறுகிறது.
சில பகுதிகளில் போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐஐடி, சென்னை பல்கலைக்கழகம் உள்ளிட்ட இடங்களில் மாணவர்கள் பேரணி நடத்தினர்.

குடும்பத்தினருடன் பேரணி
இந்த நிலையில் சென்னை ஆலந்தூரில் தவ்ஹுத் ஜமாத் அமைப்பினர் பேரணியாக சென்றுள்ளனர். இந்த பேரணியில் 5000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த பேரணியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டுள்ளனர்.

பேரணி
இந்த பேரணியில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இவர்கள் பேரணியாக கிண்டி சென்று அங்கிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி செல்ல அனுமதி கேட்டிருந்தனர்.

பேரணியில் எம்எல்ஏ
ஆனால் அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் எம்எல்ஏ தமிமுன் அன்சாரி தலைமையில் நடைபெறும் இந்த பேரணியில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

நீளமான தேசியக் கொடி
இவர்கள் அமைதியான முறையில் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பேரணிக்கு ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீளமான தேசியக் கொடியுடன் பேரணி சென்று வருகின்றனர்.
-
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்!












Click it and Unblock the Notifications