கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேர் தீவிபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கூடுவாஞ்சேரி கன்னிவாக்கத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (33). இவரது மனைவி ஜெயசித்ரா (29), இவர்களது இரண்டரை வயது மகள் ஜெயஸ்ரீ. இவர்கள் மூவரும் நேற்று இரவு தூங்கச் சென்றனர்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அவர்களது வீடு தீப்பற்றி எரிந்தது. இதில் மூவரும் உடல் கருகி பலியாகினர். இந்த சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்த நிலையில் அவர்கள் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தீவிபத்துக்கான காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications