அண்ணாமலை முதல்வரா?.. ரஜினிக்கு தெரியுமா.. 'சோ' வாக மாற்றிவிடாது.. குருமூர்த்தியை சாடிய எஸ்.வி சேகர்
சென்னை: சோ உடன் யாரையும் ஒப்பிடமுடியாது! சோ வின் நாற்காலியில் அமர்ந்திருப்பதே ஒருவரை சோ வாக மாற்றிவிடாது என்று எஸ். வி. சேகர் கூறியுள்ளார். அண்ணாமலை பற்றி துக்ளக் இதழின் ஆசிரியர் குருமூர்த்தி பேசியது பற்றியும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எஸ்.வி. சேகர்.
துக்ளக் இதழின் 54ஆம் ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி சசிதரூர் மற்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி பேசும் போது, திமுகவை எதிர்த்து தமிழ்நாட்டில் கூட்டணி அமையாததற்கு முழு பொறுப்பு எடப்பாடி பழனிசாமிதான் ஏற்க வேண்டும். பாஜகவுக்குதான் ஓட்டுப்போடவேண்டும் என நாம் இந்த தேர்தலில் ஒவ்வொருவரும் நூறுபேரிடம் பேச வேண்டும். தமிழ்நாட்டில் பாஜக வளர்வது மட்டும்தான் திமுகவை எதிர்ப்பதற்கு வழி, அதிமுக கட்சியானது திமுக எதிர்ப்பை கைவிட்டுவிட்டது. ஏதோ ஒரு சின்ன கட்சியாக நடத்திக் கொண்டிருந்தால் போதும் என எடப்பாடி நினைக்கிறார்.

அண்ணாமலை ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தபோது ரஜினிகாந்த் அரசியலில் தீவிரமாக வர வேண்டும் என நினைத்தார். அப்போது அவர் என்னிடம் 'நான் முதலமைச்சராக வரமாட்டேன்' என்று கூறினார்.'நீங்களே முதலமைச்சராக வரவில்லை என்றால் வேறு யார் வருவார்கள்?' என நான் கேட்டேன் அப்போதுதான் அண்ணாமலை என்று ஒருவர் இருப்பதை பற்றி கூறினார்.
அண்ணாமலை குறித்து நான் பேப்பரில் படித்து கேள்விபட்டு இருந்தேன். பாஜக சித்தாந்தத்தால் அண்ணாமலை ஈர்க்கப்பட்டுள்ளார். ஒரு போலீஸ் அதிகாரிக்கு இருக்க வேண்டிய குணங்கள் அண்ணமலைக்கு உள்ளது. அரசியல் என்பது சவால் நிறைந்தது. வாழ்கையில் நிம்மதியாக இருந்த மனிதர், இன்று அதை ஓரம்போட்டுவிட்டு அரசியலில் உள்ளார். இன்று அண்ணாமலை பாஜகவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்கிறார் என பேசி இருந்தார்.

அண்ணாமலை பற்றி குருமூர்த்தி பேசியது குறித்து நடிகரும், பாஜக உறுப்பினருமான எஸ்.வி.சேகர் தனது 'எக்ஸ்' சமூகவலைத்தளத்தில் ட்வீட் செய்துள்ளார்.
அதில் அப்படி நினைச்சதே பெரிய தப்பு, நம்ம பேரை அந்தாளு நாசம் பண்ணிடுவார்ங்கிறதை உணர்ந்துதான் ரஜினி அரசியலே வேண்டாம்னு முடிவு பண்ணியிருப்பாரு. எனக்குத்தெரிந்த ரஜினி யார் பேச்சுக்கும் தலையாட்டுபவர் அல்ல. சொந்தமாக முடிவெடுப்பவர். தெய்வத்தை மட்டும் நம்புவர்" என தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் ரஜினிக்கு கூட தெரியாது. ஏப்ரல் 1ம்தேதி சொல்லணும்னு நினைச்சேன். அன்னிக்கு ஹால் கிடைக்கலை அதான் இன்னிக்கு சொல்றேன் என்றும் பதிவிட்டுள்ளார் எஸ்.வி சேகர்.
சோ உடன் யாரையும் ஒப்பிடமுடியாது! சோ வின் நாற்காலியில் அமர்ந்திருப்பதே ஒருவரை சோ வாக மாற்றிவிடாது" என தெரிவித்துள்ளார் எஸ்.வி. சேகர்.
-
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
கடைசி நிமிடத்தில் மாறிய பாஜக எண்கள்! அதிமுக கோட்டையில் ஜாக்பாட்! முழு அதிரடி பலன்கள் இதோ -
திமுகவையே ஓவர்டேக் செய்த எடப்பாடி.. அதிமுக – பாஜக தொகுதி பங்கீட்டில் இப்படி நடந்ததே இல்லை! பின்னணி -
"பிராமணர் + வன்னியர் + தேவர்" ஓட்டுக்கு வேட்டு! அதிமுக - பாஜக கூட்டணிக்கு டென்ஷன் ஏற்றும் மூவர் -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன? -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
இன்னும் சற்று நேரத்தில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு.. அதிமுக அலுவலகத்துக்கு விரைந்த பியூஷ் கோயல் -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பொறுப்பு வழங்கப்பட்டால்தானே செயல்பட முடியும்! முடிவுக்கு வரும் பாஜகவுடனான சரத்குமாரின் பயணம்?












Click it and Unblock the Notifications