“செல்லூர் ராஜூ கேட்டால் எந்த அமைச்சரும் இல்லை என்று சொல்ல மாட்டார்கள்” - அப்பாவு பேச்சால் சிரிப்பலை!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள் என சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவு கூறியதால் அவையில் சிரிப்பலை எழுந்தது.
தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கடந்த 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று முதல் மானியக் கோரிக்கைக்கான விவாதம் நடைபெற்று வருகிறது. முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறுகிறது. நீர்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து வருகிறார்.

முன்னதாக கேள்வி நேரத்தின்போது அதிமுக எம்.எல்.ஏ செல்லூர் ராஜுவை கேள்வி கேட்க, சபாநாயகர் அப்பாவு அழைத்தபோது, "நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் உங்களுக்கு ரெக்கமெண்டேஷன்" என்று தெரிவித்தார். இதைக் கேட்டு திமுக, அதிமுக எம்.எம்.ஏக்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது. செல்லூர் ராஜுவும் சத்தமாக சிரித்துவிட்டு பேசத் தொடங்கினார்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கேள்வி எழுப்பினார். மதுரை மேற்கு தொகுதியில் தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க வேண்டும் என்று அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ கோரிக்கை வைத்தார்.
அப்போது பேசிய சபாநாயகர் அப்பாவு, "நீங்கள் கேட்டால் எந்த அமைச்சரும் செய்ய மாட்டோம் என சொல்ல மாட்டார்கள்" என்று தெரிவித்தார். இதனால் சட்டப்பேரவையில் சிரிப்பலை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அவருக்கு பதில் அளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, மதுரை மேற்கு தொகுதியில் 218 மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது என்றும், 3 புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும், தாழ்ந்த நிலையில் உள்ள மின்சார கம்பிகளை மாற்றியமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பதில் அளித்தார்.












Click it and Unblock the Notifications