இலங்கை விவகாரம்:விசிக-பாஜக மோதல்; குடும்ப ஆட்சி அவலமா? ஒரே மதம் , நாடு பெரும்பான்மை வெறியின் விளைவா?
சென்னை: இலங்கையில் மக்கள் போராட்டம் எப்படி ஏற்பட்டது? குடும்ப ஆட்சியின் அவலத்தால் நிகழ்ந்ததா? ஒரே மதம், ஒரே நாடு எனும் பெரும்பான்மை வெறியால் ஏற்பட்ட விளைவா? என்பது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள், பாஜக இடையே சமூக வலைதளங்களில் கடும் மோதல் நிகழ்ந்து வருகிறது.
இலங்கையில் மக்கள் கிளர்ச்சியால் ஏற்கனவே பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே தூக்கி அடிக்கப்பட்டார். தற்போது ஜனாதிபதி பதவியில் இருந்து கோத்தபாய ராஜபக்சே விரட்டப்பட்டுள்ளார். வரும் 13-ந் தேதி தாம் பதவியில் இருந்து விலகப் போவதாக கோத்தபாய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கோத்தபாய எங்கே?
மேலும் கோத்தபாய ராஜபக்சே இலங்கையைவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இருந்தபோதும் இலங்கைக்குள் ராணுவத்தின் பாதுகாப்பில்தான் இருக்கிறார் எனவும் கூறப்படுகிறது. கோத்தபாய தப்பி ஓடியதாக சில வீடியோக்களும் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

விசிக வன்னி அரசு
இலங்கை நிலைமைகள் தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தமது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது: ஒரே நாடு- ஒரே மொழி- ஒரே மதம் என நாட்டை கட்டமைக்க முயற்சிக்கும் சர்வதிகாரிகள் யாரும் மக்களின் அறச்சீற்றத்திலிருந்தி தப்பித்து ஓடவும் முடியாது;ஒளியவும் முடியாது. இன்று இலங்கை. நாளை இந்தியா? இன்று பக்சே சகோக்கள்.நாளை மோடி சகாக்கள்?. இவ்வாறு வன்னி அரசு பதிவிட்டார்.

பாஜக நாராயணன் திருப்பதி
பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தமது ட்விட்டர் பக்கத்தில், கேடுகெட்ட குடும்ப அரசியலை தமிழர்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள், ஓட ஓட விரட்டுவார்கள் என்பதை இலங்கையில் நம் தொப்புள் கொடி உறவுகள் நேற்று உணர்த்தி விட்டார்கள். குடும்ப அரசியலை முன்னெடுப்ப்பவர்களுக்கு தமிழர்களின் எச்சரிக்கை மணி கேட்டிருக்கும் என நம்புகிறேன் என கூறியிருந்தார்.

ஹெச்.ராஜா/ வன்னி அரசு
இதேபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா, இதுதான் குடும்ப ஆட்சியின் அவலம். தமிழகமே ஜாக்கிரதை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த வன்னி அரசு, குடும்ப ஆட்சியின் அவலமில்லை. கடந்த அரை நூற்றாண்டுகாலமாக ஒரேநாடு (இலங்கை) ஒரேமொழி (சிங்களம்)
ஒரே மதம் (பவுத்தம்) என பெரும்பான்மை வெறியுடன் சிறுபான்மை மக்களை அழித்தொழிக்கும் இனவெறி கோட்பாட்டை செயல்படுத்தியதால்
பக்சே சகோக்களுக்கு ஏற்பட்ட வீழ்ச்சி. நாளை மோடி சகாக்களுக்கும் ஏற்படும் என மீண்டும் பதிவிட்டுள்ளார். இத்தகைய கருத்து மோதல்களால் சமூக வலைதளங்களில் அனல் பறக்கிறது.
-
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்!












Click it and Unblock the Notifications