தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத ‘பகல் கனவு பட்ஜெட்டாக’ அமைந்திருக்கிறது- அண்ணாமலை விமர்சனம்
சென்னை: தமிழக அரசின் பட்ஜெட், தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
தமிழக சட்டசபையில் நடப்பாண்டுக்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் அரசு பள்ளிகளில் படித்து கல்லூரிகளுக்கு சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ1,000 நிதி உதவி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்த பட்ஜெட் அம்சங்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தமது ட்விட்டர் பக்கத்தில் பட்ஜெட் குறித்து பதிவிட்டுள்ளதாவது:
இன்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில்
1. மத்திய அரசின் திட்டங்களை பெயர் சூட்டி மாநில அரசு அறிவித்துள்ளது
2. திமுக அரசு தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 'இன்றும்' நிறைவேற்றவில்லை
3. தொலை நோக்கு திட்டம் எதுவும் இல்லாத 'பகல் கனவு பட்ஜெட்டாக' அமைந்திருக்கிறது.
6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த மாணவிகளுக்கு உயர்கல்வியினை பயிலும் போது ₹1000 வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்!
ஆனால் இது 'பழைய ஆயிரம் ரூபாய் வாக்குறுதி போல் இல்லாமல்' செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அண்ணாமலை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications