வேளாண் மசோதாவை எதிர்த்து போராடுவது தேச நலனுக்கு எதிரானது.. தமிழக பாஜக தலைவர் முருகன்
சென்னை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுவது தேசநலனுக்கு எதிரானது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் எல். முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் ஆன்லைனிலேயே விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும். உலக அளவில் இன்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

என்னைப் போன்ற விவசாயிகளுக்குத்தான் இதன் கஷ்டங்கள் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு (ஸ்டாலின்) விவசாயம் என்றால் என்ன என்று தெரியாது. தக்காளிக்கு விலை கிடைக்காமல் கீழே கொட்டும்போது விவசாயி என்ன வேதனையை அனுபவிக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு இது எல்லாம் தெரியாது. ஒப்பந்தங்கள் போட்டுவிட்டால் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட விலையை நிறுவனங்கள் கொடுக்கத்தான் வேண்டும். இதற்குதான் இப்போது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகள் காலம் காலமாக வைத்திருக்கும் கோரிக்கை. அதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாய மசோதாக்களை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மக்களை குழப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் வேளாண் மசோதா தொடர்பாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்ச விலை என்பது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு முருகன் கூறினார்.
-
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை? -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
TN Election: 1-ல்தான் பாஜக ஜெயிக்குமா? திமுக 180-ஆ? டெல்லியை அதிர வைத்த ANS அதிர்ச்சி சர்வே! -
பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்? -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
முடிவுக்கு வரும் பாஜக பஞ்சாயத்து.. தமிழகம் வந்த பியூஸ் கோயல்! அமித் ஷாவுக்கு எடப்பாடி ஓகே சொல்வாரா? -
என்டிஏவில் எல்லா நாளும் கார்த்திகை.. ஒரே குடும்பமா இருக்கோம்! சென்னை வந்ததும் கோயல் சொன்ன வார்த்தை! -
பாஜக உள்ளே புகுந்துருச்சு ப்ரோ.. ஆண்டுக்காண்டு அதிகரிக்கும் சீட் எண்ணிக்கை! 20ஐ 27ஆக்கிய அமித் ஷா! -
Election Commission: தேர்தல் ஆணைய கடிதத்தில் பாஜகவின் முத்திரை.. கேரள அரசியல் கட்சிகள் அதிர்ச்சி.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications