வேளாண் மசோதாவை எதிர்த்து போராடுவது தேச நலனுக்கு எதிரானது.. தமிழக பாஜக தலைவர் முருகன்
சென்னை: மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடுவது தேசநலனுக்கு எதிரானது என்று தமிழக பாஜக தலைவர் எல். முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் எல். முருகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: விவசாயிகள் ஆன்லைனிலேயே விளைபொருட்களை விற்பனை செய்ய முடியும். உலக அளவில் இன்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.

என்னைப் போன்ற விவசாயிகளுக்குத்தான் இதன் கஷ்டங்கள் தெரியும். எதிர்க்கட்சித் தலைவருக்கு (ஸ்டாலின்) விவசாயம் என்றால் என்ன என்று தெரியாது. தக்காளிக்கு விலை கிடைக்காமல் கீழே கொட்டும்போது விவசாயி என்ன வேதனையை அனுபவிக்கிறார் என்பது எங்களுக்கு தெரியும்.
ஆனால் எதிர்க்கட்சித் தலைவருக்கு இது எல்லாம் தெரியாது. ஒப்பந்தங்கள் போட்டுவிட்டால் விவசாயிகளுக்கு குறிப்பிட்ட விலையை நிறுவனங்கள் கொடுக்கத்தான் வேண்டும். இதற்குதான் இப்போது சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இது விவசாயிகள் காலம் காலமாக வைத்திருக்கும் கோரிக்கை. அதுதான் நிறைவேற்றப்பட்டுள்ளது.
விவசாய மசோதாக்களை நிறைவேற்றிய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். மக்களை குழப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் வேளாண் மசோதா தொடர்பாக திசை திருப்பிக் கொண்டிருக்கின்றன. குறைந்தபட்ச விலை என்பது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். இவ்வாறு முருகன் கூறினார்.
-
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான்












Click it and Unblock the Notifications