கொங்கு நாடு தனி மாநிலம்.. மத்திய அரசு பரிசீலனையில் உள்ளது: பாஜக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன்
சென்னை: கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பான பரிசீலனை மத்திய அரசிடம் தொடக்க நிலையில் உள்ளது என பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க) தமிழக பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களை பிரித்து கொங்கு நாடு தனி மாநிலம் உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை உறுதி செய்யும் வகையில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தொடர்பான மத்திய அரசின் செய்திக் குறிப்பில் கொங்கு நாடு என இடம்பெற்றிருந்தது.

தற்போது தமிழக பாஜக தலைவர்கள், கொங்கு நாடு தனி மாநில கோரிக்கையை ஆதரித்து பேசி வருகின்றனர். பெருந்துறை நகர பாரதிய ஜனதா கட்சியின் கூட்டத்தில் கொங்கு நாடு தனி மாநிலம் அமைக்க கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் தமிழக பா.ஜ.க. பொதுச்செயலாளர் கரு. நாகராஜன் கூறியதாவது: மக்களின் கோரிக்கைகள் அடிப்படையில்தான் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதற்கான சமீபத்திய உதாரணம் தெலுங்கானா தனி மாநிலம்.
அதேபோல் அந்த பகுதி மக்கள் என்ன விரும்புகிறார்களோ அதை நிறைவேற்ற வேண்டியது அரசின் கடமை. பெரும்பான்மை மக்களின் விருப்பம்தான் நாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. கொங்குநாடு தனி மாநிலம் என்பது குறித்த மத்திய அரசின் பரிசீலனை தொடக்க நிலையில் உள்ளது. இவ்வாறு கரு. நாகராஜன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications