சூப்பர்.. தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி.. பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் அதிரடி மீட்டிங்!
சென்னை: தமிழ்நாட்டிலேயே வேக்சின் உற்பத்தி செய்யும் வகையில் பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளனர். பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வேக்சின் போடுவதில் பல்வேறு மாநிலங்கள் வேகம் காட்டி வருகின்றன. தினமும் வேக்சின் போடப்படும் மக்களின் எண்ணிக்கை 2.3 லட்சத்தை தாண்டி உள்ளது.
இந்த நிலையில் தமிழகத்திலேயே வேக்சின் தயாரிக்கும் திட்டத்தில் தமிழக அரசு உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. திருக்கழுக்குன்றத்தில் அமைந்துள்ள மத்திய அரசின் எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தின் தடுப்பூசி உற்பத்தி மையத்தில் வேக்சின் தயாரிக்கவும் தமிழக அரசு முயன்று கொண்டு இருக்கிறது.

வேக்சின்
தமிழ்நாட்டிலேயே வேக்சின் செய்யும் முடிவில் முதல்வர் ஸ்டாலின் உள்ள நிலையில் இன்று பாரத் பயோடெக் நிறுவனத்துடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு நடத்தினார். தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் பாரத் பயோடெக் நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பாரத் பயோடெக் நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனர் சுஜித்ரா இலா, செயல் இயக்குனர் சாய் பிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஆலோசனை
தமிழகத்தில் வேக்சின் உற்பத்தி மையத்தை அமைப்பது குறித்து இவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இது தொடர்பாக வெளியான செய்தி குறிப்பில் தமிழகத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்தின் உற்பத்தி கூடத்தை தமிழகத்தில் தொடங்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் இறையன்பு இந்த ஆலோசனை கூட்டத்தில் உடன் இருந்தார்.

பாரத் பயோடெக்
பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் வேக்சினை உருவாக்கி நிறுவனம் ஆகும். இந்தியாவில் இந்த நிறுவனம் மூலம் நாடு முழுக்க வேக்சின் வழங்கப்பட்டு வருகிறது. ஹைதராபாத்தை தலைமையிடமாக கொண்ட வேக்சின் மையம் ஆகும் இது. இந்த நிலையில் தமிழகத்திலும் இதன் உற்பத்தி மையத்தை தொடங்க முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

சந்திப்பு
நேற்றுதான் தமிழக முதல்வர் ஸ்டாலின் உடன் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சிவபத்மநாபன் சந்திப்பு நடத்தினார். இந்தியாவில் இயங்கி வரும் ஆஸ்டர்செனகா நிறுவனத்தின் கிளையின் மேலாண்மை இயக்குநராக இவர் இருக்கிறார். நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த அவர் சில நிமிடங்கள் ஆலோசனை செய்தார். அப்போதே தமிழகத்தில் ஆஸ்டர்செனகா வேக்சின் உற்பத்தி செய்யப்படுமா என்று கேள்வி எழுந்தது. முதல்வர் ஸ்டாலினை சந்தித்து சிவபத்மநாபன், மற்றும் அந்த நிறுவனத்தின் இணை இயக்குநர் அனுராதா குமார் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ. 50 லட்சம் வழங்கினர்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications