உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு திட்டம்- முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை வாங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
Recommended Video
அனைத்துக் காட்சி ஊடகத்தினருடனான ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகம் நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், கொரோனாவைக் கட்டுப்படுத்த அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை விவரித்தார்.

மேலும் உலகளாவிய ஒப்பந்தம் மூலம் 3.5. கோடி தடுப்பூசிகளை தமிழக அரசு வாங்க திட்டமிட்டுள்ளதையும் ஸ்டாலின் தெரிவித்தார். அத்துடன் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அதனை சரியாக அவர்களிடம் கொண்டுபோய் சேர்ப்பதில் ஊடகங்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் என வேண்டுகோள் விடுத்தார்.
தமிழக அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளை ஊடகங்கள் முழுமையாக வெளியிடுவதோடு மிகுந்த எச்சரிக்கையுடன் செய்திகளை வெளியிட வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார். பின்னர் ஊடகவியலாளர்களின் கருத்துகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார்.
இந்த கூட்டத்தின் முடிவில் காட்சி ஊடகங்களுக்கு அரசு சார்பில் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்கள் விவரம்:












Click it and Unblock the Notifications