கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா... மருத்துவமனையில் அனுமதி!
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை பரிசோதித்து கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் கேட்டு கொண்டுள்ளது.
இந்தியாவில் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகம் இருந்தாலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இருந்தாலும் கொரோனா இரண்டாவது அலைக்கு வாய்ப்பு இருப்பதால் எச்சரிக்கயாக இருக்கும்படி மக்களிடம் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்ததால் அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் கே.எஸ் அழகிரி சிகிச்சிக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த நபர்கள், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு காங்கிரஸ் அறிவுறுத்தி உள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டம் ஜனவரியில் அமல்... பாஜக தலைவர் அதிரடி பேச்சு!
இது குறித்து தமிழக காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகையில், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு கொரரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.