Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொரோனா: தமிழக மருத்துவர்கள் ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டார்களா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக மருத்துவர்கள் கொரோனாவை எதிர்கொள்ளும் வகையில் மத்திய அரசு ஒப்புதல் அளிக்காத பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொள்வதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவிலும் ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் பரவலைத் தடுக்கும் வகையில் பல மாநிலங்களில் மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

பூஸ்டர் தடுப்பூசி

பூஸ்டர் தடுப்பூசி

கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டவர்களுக்கும் ஓமிக்ரான் தொற்று பாதிப்பு இருப்பதாக மத்திய அரசும் தெரிவித்துள்ளது. ஏற்கனவே 2 தடுப்பூசிகள் போடப்பட்டு வரும் நிலையில் 3-வதாக பூஸ்டர் தடுப்பூசி எப்போது அனுமதிக்கப்படும் என மத்திய அரசு இதுவரை தெரிவிக்கவில்லை. 3வது டோஸாக பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி கோரப்பட்டும் வருகிறது.

ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசி?

ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசி?

இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவர்கள் பலர் ரகசியமாக பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டுக் கொண்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்த சென்னை மருத்துவர் ஒருவர், சர்வதேச மருத்துவ ஆராய்ச்சி இதழ்கள் பலவற்றிலும் 2 டோஸ் தடுப்பூசிகள் போட்டுக் கொண்டாலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகத்தான் இருக்கிறது என்கின்றன. ஆகையால் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்வது கட்டாய தேவையாகிறது என கூறியிருக்கிறார்.

ஏன் பூஸ்டர் தடுப்பூசி?

ஏன் பூஸ்டர் தடுப்பூசி?

இதேபோல் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி தாருங்கள் என மத்திய அரசிடம் நீண்டகாலமாக மருத்துவர்கள் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இன்னமும் மத்திய அரசு ஒப்புதல் தரவில்லை. தற்போதைய சூழ்நிலையில் எங்களைப் பாதுகாத்து கொள்ள பூஸ்டர் தடுப்பூசிகளைப் போட வேண்டிய தேவை இருக்கிறது என்றும் சில மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரசு மருத்துவமனைகளில் பயன்படுத்தாமல் இருக்கும் கொரோனா தடுப்பூசிகளையே பூஸ்டர் தடுப்பூசியாக மருத்துவர்கள் போட்டுக் கொள்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.

Recommended Video

    சேலம்: ஒமிக்ரானால் இறப்பு குறைவுதான்… ஆனாலும் உஷார்… அமைச்சர் அறிவுறுத்தல்!
    சட்ட விரோதமாக போட கூடாது

    சட்ட விரோதமாக போட கூடாது

    ஒரு மருத்துவர் முதலில் கோவாக்சின் தடுப்பூசி போட்டிருந்தால் மீண்டும் அடுத்த டோஸாக அதே கோவாக்சினை எடுத்திருப்பார். அப்படியான மருத்துவர்கள் தற்போது கோவிஷீல்டு தடுப்பூசியை பூஸ்டராக போட்டுக் கொள்கின்றனர். இப்படி கொரோனா தடுப்பூசிகளை கலந்து போட்டுக் கொள்வதால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது சில மருத்துவர்களின் கருத்து. 2 டோஸ் தடுப்பூசிகள்தான் போட அனுமதிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு அனுமதி இல்லாத நிலையில் அதைப் போட்டுக் கொள்வது சட்டத்துக்கு எதிரானது என்றும் அரசு தரப்பில் சுட்டிக்காட்டப்படுகிறது

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+