மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்!
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பதில் அளித்துள்ளார். பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின்சார கட்டணம் தொடர்பாக முதல்வர் விஜய் முடிவு செய்வார் என்று கூறியுள்ள நிர்மல்குமார், மின் கட்டணத்தை அரசே ஏற்குமா என்பது நிதித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக்கு வந்த பின் அனைவருக்கும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. 2 மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துவோருக்கு இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டம் கொண்டு வரப்பட்ட பின் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மின்வெட்டு தொடர்கதையாகி வந்தது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட தொடங்கினர்.

மின்சார வாரியம் தரப்பில் மின் பகிர்மானத்தில் பிரச்சனை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மின் வெட்டு காரணமாக ஏராளமான அசம்பாவிதங்களும் அரங்கேற தொடங்கின. இதனால் தவெக ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் மக்களிடையே அதிருப்தி நிலவி வருகிறது. இந்த நிலையில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதுதொடர்பாக அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் எத்தனை சதவிகிதம் மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என்று 2021ல் போட்ட உத்தரவில் தெளிவாக உள்ளது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் முதல்வர் விஜய்யுடன் ஆலோசனை முடிவு எடுப்போம்.
திமுக ஆட்சியின் போது ஒவ்வொரு ஆண்டும் 6% மின்சார கட்டணம் உயர்த்தலாம் என்று கொண்டு வரப்பட்டதே தவறான பாலிசியாகும். அந்த பாலிசி காரணமாக நுகர்வோர் மற்றும் தொழில்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் குறைந்தபட்சம் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மின் கட்டணம் உயர்வு குறித்து திட்டமிடுவோம்.
மேலும் மின் கட்டணத்தை அரசே ஏற்குமா என்பது நிதித்துறை ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. மின் கட்டண உயர்வு 3.16 சதவிகிதமாக கடந்தாண்டு இருந்த நிலையில் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் இந்த ஆண்டுக்கான உத்தரவு இன்னும் வழங்கவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனால் மின் கட்டணம் உயர்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
சினிமா துறைக்கு ரெட் கார்பெட்.. அதிமுக மாஜிக்களுடன் நோ சந்திப்பு.. விஜய்யின் செயலால் அப்செட்! -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
பிரபலங்களால் பாஜகவுக்கு ப்ராப்ளம்.. தவெகவுக்கு தாவும் 2 நடிகைகள்! பக்கா பிளான் போட்ட செங்கோட்டையன்! -
இனி 8 ஆம் வகுப்பு வரை காலை உணவு.. திமுக திட்டத்தை விரிவாக்கம் செய்யும் முதல்வர் விஜய் -
பல் இல்லாத சிங்கம்! சிங்கப்பெண் சிறப்புப் படைக்கு அதிகாரம் இல்லை! காவல் உயர் அதிகாரிகள் அதிருப்தி -
"விஜய் ஜெயித்ததும் மாறிய கோடம்பாக்கம் அரசியல்?" லாரன்ஸ் சர்ச்சையில் கொளுத்தி போட்ட ப்ளூ சட்டை மாறன் -
விஜய்யின் அரசியல் எப்படி இருக்கு? ஒரு வார்த்தையில் ரஜினி ஸ்டைலில் பதில் சொன்ன லதா.. இப்படி சொல்லிட்டாங்களே? -
ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வரவு வைப்பு! 2வது மாதமாக பணத்தை போட்டது தவெக அரசு! -
"முதல்வர் அண்ணன் எடப்பாடியார்.." பழக்க தோஷத்தில் “டங்க் ஸ்லிப்” ஆகி பின் சுதாரித்த மரகதம் குமரவேல்! -
“தவெகவிடம் ரூ.50 கோடி வாங்கினேனா? தைரியம் இருந்தா ரெய்டு விடுங்க” - மரகதம் குமரவேல் சவால்! -
திமுக ஆட்சியில் நடந்தது.. இப்போ தொடருது! விஜய்க்கு 6 மாசம் அவகாசம் கொடுங்க! துரை வைகோ ஒரே போடு! -
ஆபரேஷன் இரட்டை இலை.. மாவட்ட வாரியாக அதிமுக தொண்டர்களை இழுக்கும் தவெக.. பனையூர் வியூகம்!












Click it and Unblock the Notifications