ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை.. சென்னை ஹைகோர்ட் அதிரடி தீர்ப்பு
மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
சென்னை: மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு சென்னை மெரினாவில் பெரிய நினைவிடம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு இருந்தது. மெரினாவில் ஜெயலலிதாவிற்கு சுமார் ரூ.50 கோடி நிதியில் நினைவிடம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து இருந்தது.
இந்த நிலையில் இதற்கு எதிராக வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடுத்தார். ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க கூடாது என்று அவர் வழக்கு தொடுத்தார்.

மனுவில் என்ன தகவல்
சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது சரியான செயல் கிடையாது. இது வருங்காலத்தில் தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். அதேபோல் இந்த கட்டுமானம் விதிகளை மீறி கட்டுப்படுகிறது. அதனால் இதை தடை செய்ய வேண்டும் என்று எம்.எல்.ரவி மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.

அரசு வாதம்
இந்த வழக்கில் நடந்த வாதங்களின் போது, தமிழக அரசு ''ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைப்பது தவறான செயல் கிடையாது. அவர் இறந்த போது குற்றவாளி கிடையாது. அவர் இறந்த பின்பே சொத்துகுவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்தது. அதேபோல் இது அரசின் கொள்கை முடிவு.'' என்று தமிழக அரசு கூறியது. இந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வந்துள்ளது.

தீர்ப்பு
அதில் மெரினாவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு நினைவிடம் அமைக்க தடையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் தீர்ப்பு வழங்கியுள்ளனர். மக்கள் வரிப்பணத்தில் இந்த நினைவிடம் அமைக்க எந்த தடையும் கிடையாது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.

என்ன விளக்கம்
நீதிபதிகள் தங்களது தீர்ப்பில், சொத்துகுவிப்பு வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா இறந்துவிட்டார். அவர் இறந்த போது தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை. அதனால் அவரை சொத்துகுவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்ட குற்றவாளி என்று கூற முடியாது. அதனால் அவருக்கு அரசு நினைவிடம் அமைப்பதில் தவறில்லை என்று நீதிபதிகள் கூறியுள்ளனர்.
-
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications