கொரோனாவுக்கு நிதியில்லை...ஆனா 2 டெண்டர்கள் இன்று திறப்பு...கனிமொழி ட்வீட்!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனாவை கட்டுப்படுத்த நிதிப்பற்றாக்குறை என்று கூறும் தமிழக அரசு இன்று தஞ்சை மற்றும் கோவையில் இரண்டு டெண்டர்களை திறக்கிறது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி இன்று தனது ட்விட்டர் பதிவில், ''கொரோனா சூழலால் வருமானம் இன்றி சிக்கித்தவித்து வரும் மக்களுக்கு நிதி நிவாரணம் வழங்க மனமில்லாமல், பற்றாக்குறை எனக் கூறி வருகிறது அரசு. ஆனால், தஞ்சை மற்றும் கோவையில் தலா ரூ.1000 கோடிக்கு மேல் இரண்டு டெண்டர்கள் இன்று திறக்கப்படுகின்றன.

உட்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்திவிட்டு, அந்த நிதியை மக்களின் நிவாரணத்திற்காகவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கும் பணிகளுக்கும் அரசு பயன்படுத்த வேண்டும். இந்த நேரத்திலும் பணமே குறிக்கோளாக செயல்படக் கூடாது'' என்று குறிப்பிட்டுளார்.














Click it and Unblock the Notifications