விஏஓக்களின் பாதுகாப்புக்காக கைத்துப்பாக்கி? டிஜிபிக்கு பறந்த கடிதம்! விரைவில் அதிரடி முடிவு!
சென்னை: உயிருக்கு பாதுகாப்பு இல்லை என்பதால் கைத்துப்பாக்கி கேட்டு விஏஓக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், தமிழ்நாடு அரசின் உள்துறை, காவல்துறை டிஜிபிக்கு கடிதம் எழுதியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது. மணல் கொள்ளையை தட்டிக் கேட்ட அரசு அதிகாரி அலுவலகம் புகுந்து வெட்டிக்கொலை செய்த சம்பவத்தால் சாமானிய மக்கள் அதிர்ச்சியில் உறைந்தளனர். சட்டவிரோத செயல்களை தட்டிக் கேட்கும் அதிகாரிகள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருவது அரசு அதிகாரிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் அரசிடம் முக்கிய கோரிக்கையை வைத்தது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கடிதம் எழுதினர். நேர்மையான அதிகாரிகள் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தற்காப்பு பயிற்சி வழங்க வேண்டும் என்றும் தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்குவது பற்றி பரிசீலனை செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், விஏஓக்களின் இந்தக் கோரிக்கை தொடர்பாக தமிழ்நாடு அரசின் உள்துறை, காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு கடிதம் அனுப்பியுள்ளது. வருவாய்த்துறையின் கீழ் வரும் கிராம நிர்வாக அலுவலர்கள் முன்வைத்த கோரிக்கை குறித்து டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு தமிழ்நாடு அரசின் கூடுதல் செயலாளர் தி.வைதேகி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்பிற்காக கைத்துப்பாக்கி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் அளித்த நிலுவையில் உள்ள புகார்கள் தொடர்பான விவரங்களை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து, காவல்துறை டிஜிபி, இந்த விவகாரத்தில் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விஏஓக்கள் கோரிக்கை விடுத்தபடி அவர்களின் தற்காப்புக்காக கைத்துப்பாக்கிகள் வழங்கப்படுமா? அல்லது வேறு ஏதேனும் பாதுகாப்பு வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications