"ஸ்கெட்ச்" எடப்பாடிக்கு மட்டுமில்ல.. ஸ்டாலின் வைத்த "டுவிஸ்ட்"! அதிர்ச்சியில் உறைந்த சசி, பன்னீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அதிமுகவில் மோதல் விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எடப்பாடிக்கு எதிராகவும் ஓ.பி.எஸ்., சசிகலா தரப்புக்கு ஆதரவாகவும் செயல்படுவதைபோல் செய்திகள் வெளியான நிலையில் அரசு தற்போது எடுத்துள்ள முடிவு கணிப்புகள் அனைத்தையும் தகர்த்துள்ளது.

கடந்த ஜூலை 11 ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது உட்பட அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்து வந்த சென்னை உயர்நீதிமன்றம் இரு தரப்பு வாதங்களையும் கேட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17 ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கிற்கான தீர்ப்பை வெளியிட்டார். அதில் ஜூலை 11 ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி தரப்பு கூட்டிய பொதுக்குழுகூட்டம் செல்லாது என்று தெரிவித்துள்ளது.

உத்தரவு

உத்தரவு

ஜூலை 11 ஆம் தேதி எடுக்கப்பட்ட தீர்மானங்கள் செல்லாது என்றும், ஜூலை 23 க்கு முன் கட்சியில் இருந்த நிலையில் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இருவரும் இனி தனித்தனியாக பொதுக்குழுவை கூட்டக்கூடாது என்றும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

மேல்முறையீடு

மேல்முறையீடு

சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்து உள்ள இந்த அதிரடி உத்தரவின் காரணமாக 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் செல்லாமல் போனது. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொருளாளராகவும், எடப்பாடி பழனிசாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும் தொடர்கின்றனர்.

எடப்பாடிக்கு ஸ்கெட்ச்

எடப்பாடிக்கு ஸ்கெட்ச்

இத்தனை களேபரங்களுக்கு மத்தியில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கும் சூடுபிடிக்கத் தொடங்கியது. இதில் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான முக்கிய தலைகள் பெயர்களும் அடிபட்டன. குறிப்பாக எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான அதிமுகவை சேர்ந்த இளங்கோவனிடம் விசாரிக்க காவல்துறை முடிவு செய்தது. இதுமட்டுமின்றி எடப்பாடிக்கு நெருக்கமானவர்கள், எஸ்.பி.வேலுமணிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை ரெய்டுகளை வைத்து எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு அரசு ஸ்கெட்ச் போட்டிருப்பதாக பேசப்பட்டது.

அதிர்ச்சியில் சசிகலா, ஓபிஎஸ்

அதிர்ச்சியில் சசிகலா, ஓபிஎஸ்

அதேநேரம் ஓ.பன்னீர்செல்வதை அதிமுக ஒருங்கிணைப்பாளர் என முதலைமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தது போன்றவற்றை வைத்து அவருக்கு சாதகமாக அரசு இருப்பதாகவும் கூறப்பட்டன. தற்போது சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் இணைவது உறுதியாகி இருக்கும் நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் ஆறுமுகசாமி ஆணைய அறிக்கைபடி சசிகலாவிடம் விசாரணை நடத்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு அரசு சாதகமாக இருப்பதாக பேசப்பட்டு வந்த தகவல் பொய்யாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+