Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இனி சரிப்பட்டு வராது.. ஆக்சனில் இறங்கும் தமிழ்நாடு! காவிரி பிரச்சனை - உச்சநீதிமன்றத்தை நாட முடிவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த நீரின் அளவு குறைவு என்பதால் உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் கடந்த முறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 38 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வலியுறுத்தியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு அதிகாரிகளோ தண்ணீரை திறக்க மறுத்தனர்.

TN Government planned to move to supreme court for cauvery river issue

போதிய நீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்கள், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கர்நாடகா காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரில் 41 டி.எம்.சி பாக்கியை வைத்து இருக்கிறது. இந்த மாதத்தில் மீதம் உள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி வீதம் 24 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.

ஆகஸ்ட் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 65 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டி இருந்தது. தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 10 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.

இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்ததை அடுத்து. தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "புதிதாக தனி அமர்வு அமைப்போம்." என தெரிவித்தார்.

இந்த நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் ஏற்கவில்லை. 5 ஆயிரம் கன அடி நீர் என்பது குறைவு என தமிழ்நாடு அரசு வாதிட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+