இனி சரிப்பட்டு வராது.. ஆக்சனில் இறங்கும் தமிழ்நாடு! காவிரி பிரச்சனை - உச்சநீதிமன்றத்தை நாட முடிவு
சென்னை: தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில், இந்த நீரின் அளவு குறைவு என்பதால் உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் கடந்த முறை பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு காவிரியில் இருந்து வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் 38 டிஎம்சி தண்ணீரை திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு அரசு கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி வலியுறுத்தியது. ஆனால், காவிரி மேலாண்மை வாரிய உத்தரவை மதிக்காமல் கர்நாடக அரசு அதிகாரிகளோ தண்ணீரை திறக்க மறுத்தனர்.

போதிய நீர் இல்லாததால் காவிரி பாசன மாவட்டங்கள், டெல்டா விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். கர்நாடகா காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய தண்ணீரில் 41 டி.எம்.சி பாக்கியை வைத்து இருக்கிறது. இந்த மாதத்தில் மீதம் உள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு 1.5 டி.எம்.சி வீதம் 24 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தியது.
ஆகஸ்ட் இறுதி வரை தமிழ்நாட்டிற்கு கர்நாடகா 65 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டி இருந்தது. தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தங்களுக்கு பிறகு 10 டி.எம்.சி தண்ணீரை திறந்துவிடுவதாக அம்மாநில துணை முதலமைச்சர் டிகே சிவகுமார் தெரிவித்தார். இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு ஒன்றை தாக்கல் செய்தது.
இந்த மனு இன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்ததை அடுத்து. தமிழ்நாடு அரசு காவிரி நதிநீர் தொடர்பான மனுக்களை விசாரிக்க தனி அமர்வு அமைக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதனை கேட்ட தலைமை நீதிபதி சந்திரசூட், "புதிதாக தனி அமர்வு அமைப்போம்." என தெரிவித்தார்.
இந்த நிலையில் இன்று காவிரி மேலாண்மை வாரியம் தமிழ்நாட்டுக்கு 15 நாட்களில் 5 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை தமிழ்நாடு அரசும் கர்நாடக அரசும் ஏற்கவில்லை. 5 ஆயிரம் கன அடி நீர் என்பது குறைவு என தமிழ்நாடு அரசு வாதிட்டது. இதனை அடுத்து உச்சநீதிமன்றத்தை நாட தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளது.
-
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்?












Click it and Unblock the Notifications