தேசிய கீதத்தை அவமதித்துவிட்டார் ஆளுநர் ரவி.. சட்டசபைக்கு வெளியே தங்கம் தென்னரசு பேட்டி
சென்னை: சமூக நீதி, சமத்துவம், பெண் அடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி இந்த வார்த்தைகளை எல்லாம் ஆளுநர் தவிர்த்து இருக்கிறார் என்றும், அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்து சென்றிருக்கிறார் என்றும் அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி முழுமையாக படிக்கவில்லை என்றும் சில வார்த்தைகளை படிக்காமல் தவிர்த்து விட்டதாக விமர்சனங்கள் எழுந்தன. இதையடுத்து முதல்வர் மு.க ஸ்டாலின் பேசுகையில், "சட்டசபை விதிகளின் படி அரசு தயாரித்து கொடுத்ததை மட்டுமே ஆளுநர் படிக்க வேண்டும். அது விதி மீறல். ஆளுநரின் இந்த செயல் வருத்தம் தருவதால் அதற்கு எதிராக தீர்மானம் கொண்டு வருகிறேன்" என்று கூறினார்.
இதையடுத்து ஆளுநர் படித்த உரை, வாக்கெடுப்பு மூலம் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. மாறாக அரசு தயாரித்த மொத்த உரையும் அவை குறிப்பில் இடம்பெற்றது. அந்த உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. முதல்வர் ஸ்டாலின் இந்த உரையை நிகழ்த்தும் போது ஆளுநர் ஆர். என் ரவி பாதியில் அவையில் இருந்தே வெளியேறினார். இந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு தேசிய கீதத்துக்கும் ஆளுநர் மரியாதை அளிக்கவில்லை என்று கூறினார். இது தொடர்பாக அவர் பேசியதாவது:-

விதிகளுக்கு மாறாக
ஆளுநர் செயல்பாடுகளில் நாங்கள் மாறுபட்ட கருத்தை கொண்டிருந்தாலும் ஆளுநர் உரையை துவங்கும் போது எந்த ஒரு எதிர்ப்பையும் தெரிவிக்காமல் அமைதி காத்து ஆளுநருக்கு உரிய மரியாதையை அரசின் சார்பாக நாங்கள் அளித்தோம். ஆனால் ஆளுநர் தனது உரையை வாசிக்கிற போது இதுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கக்கூடிய நடைமுறைகளுக்கு மாறாக சட்ட விதிகளுக்கு மாறாக அவற்றை மீறக்கூடிய வகையில் ஆளுநர் இன்று தனது உரையை வாசித்து இருக்கிறார். இது மிகுந்த வருத்தத்திற்கு உரிய ஒன்று என்றுதான் நம்முடைய முதல்வர் ஒரு தீர்மானத்தை கொண்டு வரக்கூடிய சூழல் உருவாகியிருக்கிறது.

7-ம் தேதியே ஆளுநர் பெற்றுக்கொண்டார்
ஆளுநர் அவையில் பெச வேண்டிய உரையின் வரைவு ஏற்கனவே அவருக்கு அனுப்பப்பட்டு இதற்கு ஆளுநரும் ஒப்புதல் அளித்து இருக்கிறார். கடந்த 5 ஆம் தேதியே இந்த வரைவு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு அதை 7 ஆம் தேதி ஆளுநரும் ஏற்றுக்கொண்டு இருக்கிறார். இதற்கான ஆதாரம் உள்ளது. ஆளுநர் முழுமையாக ஒப்புதல் அளித்த பிறகு இன்றைக்கு அவைக்கு வந்து ஆளுநர் படித்து இருக்கக் கூடிய உரை என்பது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. காரணம் அரசு கொடுத்த உரையில் இருந்து மாறுபட்டு செல்கிறார் என்பது மட்டும் அல்ல.

அம்பேத்கர் பெயரை வாசிக்கவில்லை
தமிழகத்தை முதன்மை மாநிலமாக உருவாக்கி வைத்திருக்க கூடிய தந்தை பெரியார், அண்ணா, காமராஜர், கருணாநிதி, அரசியல் அமைப்பை உருவாக்கிய அம்பேத்கர் பெயரைக் கூட ஆளுநர் சொல்ல மறுத்து சென்றிருக்கிறார் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அது மட்டும் இல்லை. சமூக நீதி, சமத்துவம், பெண் அடிமை ஒழிப்பு, மத நல்லிணக்கம், உள்ளடக்கிய வளர்ச்சி இந்த வார்த்தைகளை எல்லாம் ஆளுநர் தவிர்த்து இருக்கிறார்.

தேசிய கீதத்திற்கு கூட
ஒன்றிய அரசு ஜனாதிபதி உரையை வைக்கும் போது அதை அவர் அப்படியே படிக்கிறார். ஆனால் ஆளுநர் அந்த உரையை விடுத்து அவராகவே சில வார்த்தைகளை புதிதாக சேர்த்து செல்வது என்பது நிச்சயமாக ஏற்புடையது அல்ல. அதிலும் குறிப்பாக தேசிய கீதத்திற்கு கூட உரிய மரியாதை தராமால் முதல்வர் பேசுகிற போதே.. தேசிய கீதம் போடுவதற்கு முன்பாக.. அதற்கு கூட இருக்காமல் ஆளுநர் வெளியே சென்றிருப்பது இழுக்காக கருதுகிறோம்.

அநாகரீகமான செயல்
அதேபோல அதிமுகவும் அதற்கு முன்பாக அவையில் இருந்து வெளியே சென்று இருக்கிறார்கள். தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பாக அதிமுக வெளியேறி இருப்பதுதான் அவர்கள் செய்த மிக அநாகரீகமான செயல் என்பதை சொல்ல விரும்புகிறேன். சனாதன கொள்கைகளை வெளியில் பேசலாம்..சொந்த விருப்பு வெறுப்புகளை அவைக்கு கொண்டு வருவது ஏற்புடையது அல்ல. அதிமுகவை பொருத்தவரை அண்ணாவால் உருவாக்கப்பட்ட தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு மாறாக ஒரு பதத்தை உருவாக்க வேண்டும் என்ற கருத்தை கண்டிப்பதற்கு வக்கோ.. வகையோ.. திராணியோ இல்லாமல் அடிமை சாசனத்தை எழுதிக் கொடுத்து விட்டு இன்று அதிமுகவினர் வெளியே சென்று இருப்பது வெட்கக்கேடானது. இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார்.
-
கோட்டையை தீர்மானிக்கும் வேடசந்தூர் ராசி! தமிழகத்தின் தீர்க்கதரிசி! எம்ஜிஆர் காலத்து சென்டிமென்ட்! -
ADMK Candidate list: 167 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் யார் யார்? முழு பட்டியல்! -
கிராவல் மண் குவாரி முறைகேடு.. தமிழக அரசுக்கு 1,000 கோடி வருவாய் இழப்பு.. லாரி உரிமையாளர்கள் -
தென் தமிழகத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பாதை.. இடி, மின்னலுடன் கொட்டப்போகும் மழை! உஷார் மக்களே! -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு












Click it and Unblock the Notifications