பரபரப்பான கட்டத்தில் தமிழ்நாடு அரசியல்.. நாளை டெல்லி செல்கிறார் தமிழக ஆளுநர்!
தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல முடிவு எடுத்துள்ளார்.
Recommended Video

சென்னை: தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பிரதமர் மோடியை சந்திப்பதற்காக நாளை டெல்லி செல்ல உள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கு பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் இந்த வழக்கின் தீர்ப்பு அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்துவிட்டது. இந்த தீர்ப்பை பொறுத்துதான் தமிழக அரசியல் அடுத்த கட்ட நகர்வை சந்திக்கும். ஏற்கனவே தீர்ப்பிற்கு தயாராகும் விதத்தில் டிடிவி தினகரன் தனது ஆதரவாளர்களை குற்றாலத்தில் தங்க வைத்துள்ளார்.
இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்று எல்லோரும் நினைத்து கொண்டு இருக்கும் சமயத்தில் தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் நாளை டெல்லி செல்ல முடிவு எடுத்துள்ளார். இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
[தகுதி நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் குற்றாலத்தில் கேம்ப்.. தாமிரபரணியில் தலைமுழுகல்.. நல்ல தீர்ப்புக்காக!]
நாளை ஆளுநர் புரோகித் பிரதமர் மோடி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவை சந்திக்க உள்ளார்.இந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் நாளை தீர்ப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் டெல்லி செல்லும் ஆளுநரின் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தீர்ப்பு டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வரும் பட்சத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. அந்த சமயத்தில் ஆளுநரின் பங்கு முக்கியமாகும். இதன் காரணமாக அவரது டெல்லி பயணம் கவனம் ஈர்த்து இருக்கிறது.
-
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications