தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பை மேம்படுத்த முதல்வர் ஸ்டாலின் தலைமையில் 17 பேர் குழு
சென்னை: தமிழகத்தில் கோவில்கள் பராமரிப்பை செம்மைப்படுத்தவும் பக்தர்களின் வசதியை மேம்படுத்தவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து கோவில்களையும் மேம்படுத்த உயர்நிலை ஆலோசனைக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு, அரசாணையை வெளியிட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான இந்த குழுவின் துணை தலைவராக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் தவத்திரு குன்றக்குடி அடிகளார், சுகி சிவம், கருமுத்து கண்ண, இராமசுப்பிரமணியன் உள்ளிட்ட 17 பேர் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

முதல்வர் ஸ்டாலின், இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை செயலாளர், இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் ஆகியோர் பதவி வழி அலுவல் சார் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை...வாசலில் நின்று வழிபட்ட மக்கள்

இந்த குழுவில் இடம்பெற்றுள்ள அலுவல் சாரா உறுப்பினர்கள்: தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், ஶ்ரீமத் வராக மகாதேசிகன், ஶ்ரீலஶ்ரீ அம்பலவாண தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், சாந்தலிங்க மருதாசல அடிகளார், நீதியரசர் டி.மதிவாணன் (ஓய்வு), சு.கி.சிவம், கருமுத்து கண்ணன், சத்தியவேல் முருகனார்ர், இராமசுப்பிரமணியன், தரணிபதி ராஜ்குமார், மல்லிகார்ஜூன் சந்தான கிருஷ்ணன், ஶ்ரீமதி சிவசங்கர், தேச மங்கையர்க்கரசி.












Click it and Unblock the Notifications