தமிழகத்தில் அரசு, தனியார் பஸ்களில் இனி ஏ.சி. பயன்படுத்தலாம் ... ஆனால் சில கட்டுப்பாடுகள்!
சென்னை: தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
Recommended Video

2020 மார்ச் 25 முதல் 702 ஏ.சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு கூறியுள்ளது.
இந்தியாவின் கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் படிப்படியாக தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்து வருகிறது.

ஏசியினால் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதாக கூறியதால் தனியார் மற்றும் அரசு நிறுவனங்களில் முதலில் ஏசியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இதேபோல் பஸ்களில் ஏசியை பயன்படுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.ஏற்கனவே, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் கொரோனா தடுப்பு விதிமுறைகளுக்குட்பட்டு ஏசியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்ட நிலையில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் ஏசியை பயன்படுத்த தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:-
* கொரோனா பரவல் காரணமாக பேருந்துகளில் ஏ.சி. வசதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசு தற்போது அனுமதி அளித்துள்ளது.
* பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகளுக்கும் ஏ.சி. வசதியுடன் பேருந்துகளை இயக்கலாம்.
* 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், இணை நோய் உள்ளவர்கள் பேருந்துகளில் பயணிப்பதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* 2020 மார்ச் 25 முதல் 702 ஏ.சி. அரசு பேருந்துகளை இயக்காததால் வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தமிழக அரசு கூறியுள்ளது.












Click it and Unblock the Notifications