தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவை... சட்ட வல்லுநர்களுடன் தீவிர ஆலோசனை- ஜனவரியில் மசோதா தாக்கல்?
சென்னை: தமிழகத்தில் மீண்டும் சட்ட மேலவையை அமைப்பது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் தமிழக அரசு தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறும் சட்டசபை கூட்டத் தொடரின் போது சட்ட மேலவைக்கான மசோதா தாக்கல் செய்யப்படக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
இந்தியாவில் தற்போது 6 மாநிலங்களில்தான் சட்ட மேலவை நடைமுறையில் உள்ளது. 1986-ம் ஆண்டு தமிழக முதல்வராக எம்.ஜி.ஆர். இருந்தபோதுதான் சட்ட மேலவை கலைக்கப்பட்டது.

மேலவையில் தலைவர்கள்
தமிழகத்தின் முதுபெரும் தலைவரான முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி உள்ளிட்டோர் சட்ட மேலவை உறுப்பினர்களாக இருந்தவர்கள். சட்ட மேலவையில் தமிழ்ச் சான்றோர்கள் பலரும் உறுப்பினர்களாக இருந்தனர். தமிழக சட்ட மேலவை கலைக்கப்பட்டதன் ஒரு வரலாறு உண்டு.

மேலவை கலைப்பும் வெண்ணிற ஆடை நிர்மலாவும்
1986-ல் எம்.ஜி.ஆர். தம்முடன் திரைப்படங்களில் நடித்த வெண்ணிற ஆடை நிர்மலாவை மேலவை உறுப்பினராக்க முடிவு செய்தார். ஆனால் வெண்ணிற ஆடை நிர்மலா பதவியேற்புக்கு முன்பு, தம்மை திவால் ஆனவர் என அறிவித்திருந்தார். அப்படி திவாலான நபர்கள், மேலவை உறுப்பினராக முடியாது எனக் கூறி ஒரு வழக்கு தொடரப்பட்டது. அப்போது அதிமுக நிதியில் இருந்து ரூ.4.65 லட்சத்தைக் கொடுத்து வெண்ணிற ஆடை நிர்மலாவின் திவால் சூழ்நிலையை மாற்ற முயன்றார் எம்ஜிஆர். இதனடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம், வெண்ணிற ஆடை நிர்மலா திவால் ஆனவர் அல்ல என தீர்ப்பளித்தது. வெண்ணிற ஆடை நிர்மலா தமது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார். அப்போதைய ஆளுநர் குரானா, திவாலான நபரை எப்படி சட்ட மேலவை உறுப்பினராக்குவது என எம்ஜிஆரிடம் கேள்வி எழுப்பினார். இதையடுத்து சட்ட மேலவையையே கலைத்தார் எம்.ஜி.ஆர்.

திமுக அரசுகள் முயற்சி
1989, 1996, 2006-ல் திமுக ஆட்சிக் காலத்தில் மேலவைகள் கொண்டுவர முயற்சிக்கப்பட்டன. 2011-ன் இறுதியில் மேலவை சட்டப்படியாக உருவாகும் நிலை இருந்தது. ஆனால் தேர்தலில் வென்ற ஜெயலலிதா, இந்த முயற்சியை கைவிட்டார். அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் மேலவையை கொண்டுவருவோம் என திமுக உறுதியளித்திருந்தது. முடிவடைந்த சட்டசபை கூட்டத் தொடரிலும் மேலவையை கொண்டு வருவோம் என சட்டசபையில் திமுக அரசு உறுதி தந்தது.

சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை
இதனடிப்படையில் தற்போது சட்ட மேலவையை கொண்டு வருவது தொடர்பாக திமுக அரசு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கும் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடரில் இதற்கான மசோதா கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது என்கின்றன கோட்டை வட்டாரங்கள்.
-
கிராமங்கள் vs நகரங்கள்.. 2021 சட்டசபை தேர்தலில் திமுக, அதிமுகவின் செயல்பாடுகள் எப்படி? -
திமுக VS அதிமுக.. தமிழகத்தில் எந்த கூட்டணி பலம்? 2021 -2026 ஒப்பீடு.. ‘வெயிட்' காட்டும் கட்சிகள் -
தேனியில் உள்ள 4 தொகுதிகளில் 3ல் உதயசூரியன் உதிப்பது உறுதி.. பெரியகுளம் ரிசல்ட் விஜய் கையில் இருக்கு! -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்? பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் போகாத மா.கம்யூனிஸ்ட்! என்ன நடந்தது? -
கொங்கில் கூட்டணிக்கு நோ சீட்.. ஸ்டாலினிடம் விடாப்படியா நின்ற தலைகள்! நேர்காணலில் நடந்த திடுக் விவாதம் -
10 தொகுதிக்கு குறையக்கூடாது.. 3 காரணங்களுடன் மோத தயாரான விசிக.. திமுகவுக்கு அடுத்த நெருக்கடி -
"கவுண்டவுன் ஸ்டார்ட்".. அண்ணா அறிவாலயத்தில் மின்னும் டிஜிட்டல் போர்டு.. திமுகவினர் உற்சாகம்! -
8 கேட்கும் விசிக.. 6க்கு இழுக்கும் திமுக.. அழுத்தமாக நிற்கும் திருமாவளவன்.. திமுக கணக்கு என்ன? -
புதிய கட்சிகள் வரவால் திமுகவுக்கு நெருக்கடி.. 165-க்கும் குறைவான தொகுதியில்தான் இந்த முறை போட்டியா? -
திமுகவில் நேர்காணல்! ஓபிஎஸ் பிரசென்ட்! கனிமொழி ஆப்சென்ட்! என்ன காரணம்? -
மார்ச் 23.. 6 சீட்டுக்கு 1 குறைஞ்சா கூட மீண்டும் அழைக்காதீங்க.. திமுகவுக்கு கெடு விதித்த சிபிஎம்! -
விஜய் எவ்வளவு ஓட்டு வாங்குவார்? நேர்காணலின் போது திமுக நிர்வாகிகளிடம் ஸ்டாலின் எழுப்பிய கேள்வி!












Click it and Unblock the Notifications