ஆந்திரா பாணி.... இனி டாஸ்மாக் மதுகடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டும் திறப்பு!
சென்னை: தமிழகத்தில் இனி டாஸ்மாக் மதுபான கடைகள் காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டுமே திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிவேகமாக இருந்து வருகிறது. கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன.

புதிய கட்டுப்பாடுகள்
இதனால் தமிழகத்தில் நாளை முதல் பெரும்பாலான கடைகளை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அத்துடன் அத்தியாவசிய மளிகை உள்ளிட்ட கடைகள் பகல் 12 மணிவரை மட்டும் திறக்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

மதுபான கடைகள் மூட கோரி வழக்கு
ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு புதிதாக எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. தற்போது இரவு 9 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறந்து வைக்கப்படுகின்றன. இதனை எதிர்த்து டாஸ்மாக் கடைகளையும் மூட வலியுறுத்தி வழக்குகள் தொடரப்பட்டன.

நேரம் குறைப்பு- அறிவிப்பு
இந்த வழக்கு விசாரணையின் போது டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கும் நேரத்தை குறைக்கப் போவதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது. இதனடிப்படையில் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே டாஸ்மாக் கடைகளை திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ஆந்திராவை போல் அமல்
ஏற்கனவே ஆந்திராவில் இதேபோல் காலை 8 மணி முதல் பகல் 12 மணிவரைதான் மதுபான கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனையே தமிழக அரசும் பின்பற்றி தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.












Click it and Unblock the Notifications