Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விண்ணை முட்டும் காய்கறி விலை.. ரேசன் கடைகளில் மலிவாக விற்க அரசு தயார்.. அமைச்சர் பெரியகருப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: காய்கறிகள் விலை உயர்ந்தால் ரேசன் கடைகள் மூலம் காய்கறிகளை விற்கவும் அரசு தயாராக உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார். அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த அரசு முயற்சி எடுத்து வருவதாகவும் அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில காய்கறிகளின் விலையும் உச்சம் தொட்டுள்ளது.
தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டு உள்ளதால் வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை உயர்ந்து விற்பனையாகிறது.

TN Govt ready to sell vegetables through ration shops says Minister Periyakaruppan

தக்காளி விலையைப் போல அவரக்காய், பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் போன்றவற்றின் விலையும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த மாதம் ரூ.70க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனையாகிறது.

பீட்ரூட் கிலோ ரூ.60, கேரட் கிலோ ரூ.80, அவரை கிலோ ரூ.100, வெண்டைக்காய் கிலோ ரூ.40, கத்திரிக்காய் கிலோ ரூ.50, பாகற்காய் கிலோ ரூ.65, பீர்க்கங்காய் கிலோ ரூ.70, புடலங்காய் கிலோ ரூ.50, கொத்தவரங்காய் கிலோ ரூ.60, இஞ்சி கிலோ ரூ.220, உருளைக்கிழங்கு கிலோ ரூ.30, முருங்கைக்காய் கிலோ ரூ.60, முட்டைகோஸ் கிலோ ரூ.25, சின்ன வெங்காயம் கிலோ ரூ.70, பெரிய வெங்காயம் கிலோ ரூ.30 என விற்பனை செய்யப்படுகிறது.

வடமாநிலங்களில் கனமழை கொட்டி வருகிறது. தென் மாநிலங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. பருவநிலை மாற்றத்தால் காய்கறிகள் விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காய்கறி சந்தைகளுக்கு வரத்து குறைவாக உள்ளதால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. தக்காளியை பசுமை பண்ணை கடைகளில் ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பெரியகருப்பன், தேவைக்கு ஏற்ப வெளிமாநிலங்களில் இருந்து தக்காளி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். காய்கறி விலை உயர்வு தொடர்ந்து நீடித்தால் நியாய விலைக்கடைகளில் கூட குறைந்த விலையில் காய்கறிகளை விற்க தயாராக உள்ளோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காலத்தில் தக்காளி கிலோ 150 ரூபாய்க்கும் அனைத்து காய்கறிகளும் ஒரு கிலோ 100 முதல் 150 வரைக்கும் விற்பனையானது. இதனையடுத்து ரேசன் கடைகளிலும் நடமாடும் காய்கறி கடைகள் மூலம் காய்கறிகள், தக்காளி, வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது. அதே போல நடப்பாண்டும் காய்கறிகளை விற்பனை செய்ய தயாராக உள்ளதாக அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+