அரசு மருத்துவ கல்லூரியில் சேர அரசு பள்ளி மாணவர்கள் யாருமே தகுதி பெறவில்லை... ஷாக் தகவல்!
சென்னை: தமிழக அரசு மருத்து கல்லூரிகளில் சேர அரசு பள்ளி மாணவர்கள் ஒருவர் கூட தகுதி பெறவில்லை என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
கிராமப்புற, ஏழை ஒடுக்கப்பட்ட மக்களின் உயர் கல்வி கனவில் மண் அள்ளிப் போட்டது நீட் எனும் நுழைவுத் தேர்வு. இந்த நீட் தேர்வானது சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது.

தமிழக மாணவர்கள் பெரும்பாலானோர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் கல்வி கற்றவர்கள். இதனால் தமிழக மாணவர்கள் நீட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமற்ற ஒன்று.
இந்த ஆண்டு நீட் தேர்வில் தோல்வி அடைந்த 3 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பயின்ற ஒரு மாணவர்கூட நீட் தேர்வில் வெற்றி பெறவில்லை என்கிற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் மொத்தம் 1,23,078 பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 59,785 பேர்தான் தேர்ச்சி பெற்றனர். 31,239 பேர் தமிழ் வழியில் தேர்வு எழுதியவர்கள்.
அரசு பள்ளிகளில் பயின்ற 2,000 மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆனால் 4 மாணவர்கள் மட்டும்தான் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
இந்த 2,000 பேரில் ஒருவர் கூட அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் பெறும் அளவுக்கு மதிப்பெண் பெறவில்லை. தமிழக அரசு 412 நீட் பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தது. ஆனால் மாணவர்களால் அரசு மருத்துவ கல்லூரியில் சேருவதற்கான மதிப்பெண்களை பெற இயலவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications