தமிழகம்:37 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர்- சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் இட மாற்றம்!
சென்னை: தமிழகத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பலரும் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். தமிழக சுகாதாரத்துறை செயலாளரான ஜெ.ராதாகிருஷ்ணன் அப்பதவியில் இருந்து இடம் மாற்றம் செய்யப்பட்டு கூட்டுறவுத் துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மருத்துவத்துறை மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளராக பி.செந்தில்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மை செயலாளராக பிரதீப் யாதவ் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.
Recommended Video

மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையராக ஜெசிகா ; போக்குவரத்து துறை ஆணையராக நிர்மல் குமார்; ஊரக வளர்ச்சித் துறை இயக்குநராக தாரேஷ் அகமது உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தென்காசி, திருச்சி, ராமநாதபுரம், தருமபு ஆட்சியர்களும் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கூட்டுறவுத் துறை செயலாளராக இருந்த நசிமுதீன், தொழிலாளர் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். நெடுஞ்சாலைத்துறை செயலரான தீரஜ்குமார், வணிகவரித்துறை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்ட ஆட்சியராக பிரதீப்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். தருமபுரி ஆட்சியாக சாந்தி ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். தருமபுரி ஆட்சியரான திவ்யதர்ஷிணி, மகளிர் மேம்பாட்டு நல ஆணையராக இடம் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார். மதுவிலக்கு ஆயத்தீர்வு ஆணையராக மதிவாணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
உள்துறை செயலாளராக பணீந்தர ரெட்டி நியமிக்கப்பட்டுள்ளார். திருச்சி ஆட்சியராக இருந்த சிவராசு, வணிக வரித்துறை கோவை இணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக ஆகாஷ் நியமிக்கப்பட்டிருக்கிறார். ராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சியராக ஜானி டாம் வர்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
முதல்வரின் முகவரி சிறப்பு அதிகாரி ஷில்பா பிரபாகர் சதீஷூக்கு தேசிய சுகாதார திட்ட இயக்குநராக கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
வருவாய் நிர்வாக ஆணையராக எஸ்.கே.பிரபாகரன்; வரலாற்று ஆய்வுத் துறை ஆணையராக ஜி.பிரகாஷ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வணிக வரித்துறை இணை ஆணையராக சங்கீதா; தமிழக பாடநூல் மேலாண் இயக்குநராக கஜலட்சுமி ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
சிப்காட் மேலாண் இயக்குநராக சுந்தரவல்லியை தமிழக அரசு நியமினம செய்துள்ளார். சிட்கோ மேலாண் இயக்குநராக ஆனந்த் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்.
தாட்கோ- நிறுவன மேலாண் இயக்குநராக ஜெயஶ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார். மின் ஆளுமை துறை இயக்குநராக பிரவீன் நாயர், பள்ளிக் கல்வித்துறை இணை செயலராக மணிகண்டன் நியமிக்கப்பட்டுள்ளனர். தொழில்துறை கூடுதல் செயலராக மரியம் பல்லவி பல்தேவ், போக்குவரத்து சிறப்பு செயலராக டி.என்.வெங்கடேஷ் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு மாற்றப்பட்ட நிலையில் புதிய ஆட்சியராக பிரதீப் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சி இணை ஆணையராக சங்கர் லால், குடிமை பொருள் வழங்கல் நிறுவன இணை மேலாண் இயக்குநராக கற்பகம் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
கொளத்தூரை விட்டுவிட்டு தொகுதி மாறிய ஆதிராஜாராம்! சேப்பாக்கத்தில் உதயநிதியை எதிர்த்து போட்டி -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம்












Click it and Unblock the Notifications