"தமிழக வங்கிகளில் உள்ளவர்கள் நன்கு தமிழ் அறிந்திருக்க வேண்டும்.."நிதி அமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்
சென்னை: தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் இன்று நிதியமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் 2022-23 ஆண்டின் பட்ஜெட்டிற்காகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் தலைமையில் இன்று (24-01-2022) தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, நிதி அமைச்சர் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பல்வேறு அரசுத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்து நிதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். குறிப்பாக, ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கி உதவிட வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தினார்.
வங்கி வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், குறிப்பாக வன மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வங்கி வசதிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். முதல் முறையாக, வரும் 2022-23 ஆம் நிதியாண்டின் தமிழக நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறப்பட்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம் -
Election Exclusive: மதுரை மத்தியில் தலைக்கு மேல் கத்தி.. குட்டையை குழப்பும் அழகிரி & கோ! அதிரடி ஆக்ஷனில் இறங்கிய திமுக! -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ்












Click it and Unblock the Notifications