"தமிழக வங்கிகளில் உள்ளவர்கள் நன்கு தமிழ் அறிந்திருக்க வேண்டும்.."நிதி அமைச்சர் பிடிஆர் வலியுறுத்தல்
சென்னை: தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதைத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் ராஜன் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவினருடன் இன்று நிதியமைச்சர் ஆலோசனை நடத்தினார். இதில் 2022-23 ஆண்டின் பட்ஜெட்டிற்காகவும் பரிந்துரைகள் பெறப்பட்டன.

இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாடு நிதி அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் தலைமையில் இன்று (24-01-2022) தலைமைச் செயலகத்தில் மாநில வங்கியாளர் குழுவின் சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுரையின்படி, நிதி அமைச்சர் அனைத்து வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்கள், படிவங்களில் தமிழ் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார். மேலும், வங்கியின் உதவி மையங்கள் மற்றும் பொது மக்களுடன் தொடர்பில் இருக்கும் அலுவலர்கள் தமிழ் நன்கு அறிந்திருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
பல்வேறு அரசுத் திட்டங்களில் வங்கிகளின் செயல்பாடு குறித்து நிதி அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார். முன்னுரிமைத் துறைகளுக்குக் கடன் வழங்கும் திட்டங்களை முனைப்பாகச் செயல்படுத்த வேண்டும் எனக் கூறினார். குறிப்பாக, ஏழை எளிய மாணவர்களுக்குக் கல்விக் கடன் வழங்கி உதவிட வேண்டும் என வங்கிகளை வலியுறுத்தினார்.
வங்கி வசதிகள் இல்லாத தொலைதூரப் பகுதிகளில், குறிப்பாக வன மற்றும் பழங்குடியினப் பகுதிகளில் வங்கி வசதிகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். முதல் முறையாக, வரும் 2022-23 ஆம் நிதியாண்டின் தமிழக நிதிநிலை அறிக்கைக்காக வங்கியாளர்களுடன் கலந்தாலோசித்து, பரிந்துரைகள் பெறப்பட்டன" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications