Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாளை தைப்பூசம்.. தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவு அலுவலகங்கள் இயங்கும்.. தமிழக அரசு குட் நியூஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தைப்பூசம் நாளான நாளை (பிப்ரவரி 11) தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் வழக்கம் போல் செயல்படும் என தமிழ்நாடு அரசின் பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சித்திரை முதல் நாள், ஆடிப்பெருக்கு, தைப்பூசம் ஆகிய நாட்களில், சொத்து பத்திரங்களை பதிவு செய்ய, பலரும் விரும்புகின்றனர். ஆனால், இந்த நாட்கள் அரசு விடுமுறை என்பதால், சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதில்லை.

Thaipoosam tn government

இதனால், மக்கள் தங்களுக்கு விருப்பமான மங்களகரமான நாட்களில், பத்திரப்பதிவு செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். இது தொடர்பாக, பல்வேறு தரப்பினரும், அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் அடிப்படையில் தமிழக அரசு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது.

அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொதுமக்கள் விரும்புவதால் அரசு பொது விடுமுறை மற்றும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படும் சில மங்களகரமான நாட்களில் பொது மக்களால் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்திட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அந்தவகையில், முக்கிய நாட்களில் பதிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. அன்றைய நாட்களில் அதிகமான அளவில் பத்திரப் பதிவுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நாளை 11.02.2025 (செவ்வாய்கிழமை) தைப்பூசம் நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள வசதியாக தமிழ்நாட்டில் அமைந்துள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் வழக்கம்போல் காலை 10 மணி முதல் மாலை 6 வரை இயங்கும். விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டம் கீழுள்ள Table of fees இனம் 17(3)-ன் ஏ,பி,சி-ல் கூறப்பட்டவாறு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Thaipoosam tn government

தைப்பூச நாளான நாளை, ஸ்டார் 2.0 திட்டப்படி அனைத்து அலுவலகங்களிலும் பதிவுப் பணி இணையவழி தடையின்றி நடைபெற ஏதுவாக பொதுமக்களுக்கு முன் பதிவு செய்திடும் வசதி மற்றும் அலுவலக பணியாளர்கள் பொதுமக்களுக்கான ஹெல்ப் டெஸ்க் மற்றும் உதவி எண் வசதி ஆகியவற்றினை எவ்வித குறைபாட்டுக்கும் இடமின்றி உடன் ஏற்படுத்திட வேண்டும். துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் மாவட்ட பதிவாளர்கள், தங்கள் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்படுவதை கண்காணிக்க வேண்டும் என்றும் தமிழக அரசின் பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தை மாதத்தில் பூசம் நட்சத்திரமும், பெளர்ணமி இணைந்து வரும் நாள் தைப்பூசமாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் பக்தர்கள் முருகப்பெருமானை வழிபடுவார்கள். கடன் தொல்லை, கல்யாணம் என பிரச்சனைகள் இருப்பவர்கள் தைப்பூசம் அன்று விரதம் இருந்தால் நல்ல நிகழ்வுகள் நடக்கும் என்பது நம்பிக்கை. நல்ல நாளான அன்று பத்திரப் பதிவு மேற்கொள்ளவும் பெரும்பாலான மக்கள் விரும்புகின்றனர். இதையொட்டியே, நாளை முழு நாளும், பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+